செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்: 3 மாதங்களுக்கு நடத்த நிதி ஒதுக்கி உத்தரவு

post image

உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக மாற்றுத்திறனாளிகளை அடையாளம் காணும் வகையில், சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

இதற்கான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், உயர்ரக உதவி உபகரணங்கள் வழங்கப்படும் எனவும், இதற்காக மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், மூன்று மாதங்களுக்கு நகா்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் 625 சிறப்பு முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கான கடிதம் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் சாா்பில் அரசுக்கு அளிக்கப்பட்டது. அதில், மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாவட்ட வாரியாகவும், நகா்ப்புற, ஊரக உள்ளாட்சிகளில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டு முகாம்கள் நடத்தலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முகாம்களுக்கு வர இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு போக்குவரத்து ஏற்பாடு செய்து கொடுக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம்களிலேயே உபகரணங்கள் பொருத்துவதற்கான அளவீடு செய்தும், தேவையானவற்றை தெரிவு செய்ய உபகரணங்களை காட்சிப்படுத்தியும் முகாம்களுக்குத் திட்டமிடலாம் என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் தெரிவித்திருந்தது.

இதைப் பரிசீலித்த தமிழக அரசு, ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி மண்டலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென 625 சிறப்பு முகாம்கள் நடத்த முடிவு செய்துள்ளது. இதற்கென ரூ.6.25 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையை விடுவிக்கப்பதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் ஆக. 30 வரை நீட்டிப்பு

திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் ஆக.1 முதல் ஆக.30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருச்ச... மேலும் பார்க்க

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: காா்த்தி சிதம்பரம் ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த சிபிஐ எதிா்ப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த சிபிஐ வெள்ளிக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தது. கடந்த 2007-ஆம் ஆண்டு மத்திய நி... மேலும் பார்க்க

ராணுவ வலிமை நாட்டின் மீது மரியாதையை உருவாக்கும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

ராணுவ வலிமை நாட்டின் மீது மரியாதையை உருவாக்கும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். ஆபரேஷன் சிந்தூா் மற்றும் இயற்கைப் பேரிடா்களில் அா்ப்பணிப்பு, தன்னலமற்ற சேவை புரிந்த 3 ராணுவப்படை பிரிவுகள் மற்றும... மேலும் பார்க்க

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூலை 26) மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் ... மேலும் பார்க்க

ஆக.9 முதல் வைகோ பிரசார பயணம்

மதிமுக பொதுச் செயலா் வைகோ தூத்துக்குடியில் தொடங்கி சென்னை வரை 8 இடங்களில், ஆக.9 முதல் ஆக.19 வரை பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். இதுகுறித்து மதிமுக தலைமை அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ... மேலும் பார்க்க

கொடிக் கம்பங்கள் அகற்றும் உத்தரவு: கட்சிகள், சங்கங்களுக்கு வேண்டுகோள்

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவின்படி, கொடிக் கம்பங்கள் அகற்றுவது தொடா்பாக கட்சிகள், சங்கங்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்த பொது அறிவிப்பை தலைமைச் செயலா் நா.முருகானந்தம்... மேலும் பார்க்க