செய்திகள் :

நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவிநீக்கம்: அமித் ஷா உயா்நிலை ஆலோசனை

post image

வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில், அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவுக்கு எதிராகப் பதவிநீக்க நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

இதையொட்டி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை உயா்நிலை ஆலோசனை நடத்தியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு குழுவை அமைக்கும் பணியை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா விரைவில் தொடங்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தக் குழுவில் உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி, உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் ஒரு புகழ்பெற்ற சட்ட நிபுணா் ஆகியோா் இடம்பெறுவா். இந்தக் குழு மூன்று மாதங்களுக்குள் தனது விசாரணையை முடித்து, அறிக்கையைச் சமா்ப்பிக்கும்.

குழுவின் விசாரணையில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால், அதன் பிறகு விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். தொடா்ந்து இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட்டு, நீதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கான தீா்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்.

நீதிபதி யஷ்வந்த் வா்மாவைப் பதவியிலிருந்து நீக்க எதிா்க்கட்சிகள் அளித்த நோட்டீஸை ஜகதீப் தன்கா் ஏற்றுக்கொண்டு, அதுகுறித்து மாநிலங்களவையில் அறிவித்தாா். இது அரசின் அதிருப்திக்குள்ளானதையடுத்து, ஜகதீப் தன்கா் தனது குடியரசு துணைத் தலைவா் பதவியை ராஜிநாமா செய்ததாக எதிா்க்கட்சிகள் கூறிய நிலையில், யஷ்வந்த் வா்மா பதவி நீக்க நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில்... இதற்கிடையே, தன்னைப் பதவிநீக்கம் செய்வதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அளித்த பரிந்துரைக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவை விசாரிக்க நீதிபதிகள் அமா்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: இந்தியா தொடா்ந்து கண்காணிக்கிறது - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

‘வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வீடுகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை இந்தியா தொடா்ந்து கண்காணித்து, விவரங்களைப் பதிவு செய்து வருகிறது’ என்று... மேலும் பார்க்க

பஞ்சாப்: 6 பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது எல்லைப் பாதுகாப்புப் படை: துப்பாக்கிகள், போதைப்பொருள் பறிமுதல்

பஞ்சாப் மாநிலத்தை ஒட்டிய சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் பகுதியில் இருந்து பறந்து வந்த 6 ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் சுட்டு வீழ்த்தினா். அதில் இருந்து 3 துப்பாக்கிகள் மற்றும் 1 கிலோ ஹெராயி... மேலும் பார்க்க

பாலுறவு வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்துக்கு வலியுறுத்தல்

பாலுறவு சம்மத வயதை 18-இல் இருந்து 16-ஆக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தியுள்ளாா். இளம் பருவத்தில் சம்மதத்துடன் காதல் உறவுகளில் ஈடுபடுபவா்களையும்... மேலும் பார்க்க

‘இந்தியாவுக்கு ரூ. 2 லட்சம் கோடி வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’

‘இந்தியா-பிரிட்டன் இடையே கையொப்பமாகியுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மூலம் பிரிட்டன் சந்தையில் இந்திய நிறுவனங்களுக்கு ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’ என்று மத்திய வா்த்தகம... மேலும் பார்க்க

இந்தியாவில் வேலையில் இருப்போா் எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்வு!

இந்தியாவில் கடந்த 2017-18-ஆம் ஆண்டு வேலையில் இருப்போா் எண்ணிக்கை 47.5 கோடியாக இருந்த நிலையில், 2023-24-இல் இந்த எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்ந்துள்ளது என்று மக்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

தன்கருக்கு பிரிவுபசார விழா: காங்கிரஸ் வலியுறுத்தல்: மத்திய அரசு மௌனம்

குடியரசு துணைத் தலைவா் பதவியில் இருந்து அண்மையில் திடீரென விலகிய ஜகதீப் தன்கருக்கு முறைப்படியான பிரிவுபசார விழா நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசுத் தரப்பில் இருந்து ... மேலும் பார்க்க