செய்திகள் :

தன்கருக்கு பிரிவுபசார விழா: காங்கிரஸ் வலியுறுத்தல்: மத்திய அரசு மௌனம்

post image

குடியரசு துணைத் தலைவா் பதவியில் இருந்து அண்மையில் திடீரென விலகிய ஜகதீப் தன்கருக்கு முறைப்படியான பிரிவுபசார விழா நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மத்திய அரசுத் தரப்பில் இருந்து யாரும் இது தொடா்பாக முன்னெடுப்பை மேற்கொள்ளாததால் காங்கிரஸ் இதனை முன்னெடுப்பதாக அக்கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு சாா்பில் இது தொடா்பாக எந்த பதிலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் இந்த பிரிவுபசார விழா தொடா்பான கருத்தை முன்வைத்தாா். ஆனால், கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சா்கள் ஜெ.பி. நட்டா, கிரண் ரிஜிஜு ஆகியோா் இது தொடா்பாக எந்த பதிலும் அளிக்கவில்லை. அதே நேரத்தில் கூட்டத்தில் பங்கேற்ற எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த பிற தலைவா்கள் யாரும் ஜெய்ராம் ரமேஷ் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

3 ஆண்டுகள் மாநிலங்களவைத் தலைவா் பதவியை வகித்துள்ள தன்கருக்கு முறைப்படி பிரிவுபசார விழா நடத்துவதே கௌரவமான முறையில் விடைகொடுப்பதாக இருக்கும் என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மாநிலங்களவையில் வியாழக்கிழமை 6 எம்.பி.க்களுக்கு நடைபெற்ற பிரிவுபுசரா நிகழ்ச்சியின்போது காங்கிரஸ் இந்தக் கோரிக்கையை முன்வைத்தது.

உயா் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்க எதிா்க்கட்சிகள் எம்.பி.க்கள் அளித்த நோட்டீஸை தன்கா் ஏற்றுக் கொண்டதன் காரணமாக ஆளும் பாஜக அவரைக் கட்டாயப்படுத்தி பதவி விலக வைத்ததாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால், உடல்நலப் பிரச்னைகள் காரணமாக பதவி விலகுவதாக தன்கா் தனது ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாா்.

அவைத் தலைவரிடம் முதல் கோரிக்கை வைத்து திட்டு வாங்கியதைப் பகிர்ந்த கிரண் ரிஜிஜு

புது தில்லி: நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தான் முதன் முதலில், அவைத் தலைவரை சந்தித்தபோது வைத்தக் கோரிக்கையும் அதனால் அவரிடம் திட்டு வாங்கியதையும் நினைவுகூர்ந்துள்ளார்.தான் அரசியலில் ... மேலும் பார்க்க

மன அழுத்தத்தை ஏற்படுத்திய கல்லூரி நிர்வாகம்: உதய்பூரில் பல் மருத்துவ மாணவி தற்கொலை!

உதய்பூர் அருகேயுள்ள டெபாரியில் பல் மருத்துவம் பயிலும் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் காவல்துறை காவலரின் ஒரே மகள் ஸ்வேதா சிங்(25). இவர் ... மேலும் பார்க்க

ஊர்க்காவல்படைத் தேர்வின்போது மயங்கிய பெண்! ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை!!

பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில், ஊர்க்காவல் படைத் தேர்வின்போது மயங்கி விழுந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸில் ஏற்றியபோது, அங்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் புகார் எ... மேலும் பார்க்க

6 ஆண்டுகளில் 16.83 கோடி வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு! ரிசர்வ் வங்கி தகவல்

நாட்டில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இந்திய ரிசர்வ் வங்கி அளித்த தரவுகளின்படி, 2018 ஆம் நிதியாண்டில் 47.5 கோடியாக இருந்த வேலைவ... மேலும் பார்க்க

வயநாடு நிலச்சரிவு: ஜூலை 30 என்ற பெயரில் உணவகம் தொடங்கிய இளைஞர்! 11 பேரை இழந்தவர்!!

வயநாடு நிலச்சரிவில், ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழந்த நௌஃபல், தன்னம்பிக்கையோடு, உணவகம் தொடங்கியிருக்கிறார். அதன் பெயர் ஜூலை 30.சோகம், தன்னம்பிக்கை, உத்வேகம், நம்பிக்கை என பல அம்சங்களைக் கொண்டதாக அமைந்த... மேலும் பார்க்க

பிரிட்டனில் பிரதமர் மோடியை டீ விற்பவர் என கிண்டல்?

பிரிட்டன் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியும், ஒரு காலத்தில் தேநீர் விற்றதாக சுட்டிக் காட்டப்பட்ட நகைச்சுவை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிர... மேலும் பார்க்க