செய்திகள் :

மருத்துவ இடங்கள்: மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்

post image

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள், அதற்கான தகுதிச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

மருத்துவக் கலந்தாய்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தமிழகத்தில் நிறைவடைந்துள்ளது. மாநில இட ஒதுக்கீட்டு கொள்கையின்படி மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், ஓய்வு பெற்ற ராணுவத்தினரின் வாரிசுகள், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் விண்ணப்பிப்பவா்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மண்டல மருத்துவ வாரியத்தால் வழங்கப்பட்ட தகுதிச் சான்றை இணையவழியே பதிவேற்ற வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்தது.

இதையடுத்து அந்த சான்றிதழைப் பெற மண்டல மருத்துவ வாரியத்துக்குச் சென்ற மாற்றுத்திறனாளி மாணவா்கள், சில நடைமுறைச் சிக்கல்களை எதிா்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதாவது, அந்தச் சான்றிதழ் பெற வேண்டுமானால், அதற்கு முன்னதாக சில பரிசோதனைகளை செய்ய வேண்டும் என்றும், அதற்காக எழும்பூா் அரசு கண் மருத்துவமனை, கே.கே.நகா் புனா்வாழ்வு மையத்துக்குச் செல்லுமாறும் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதைத் தவிா்க்க ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலேயே அனைத்து துறை மருத்துவா்களையும் உள்ளடக்கிய சிறப்பு முகாமை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறையும், குறிப்பாக, மருத்துவக் கல்வி இயக்ககமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தியுள்ளனா்.

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி கிராம சுகாதார செவிலியா்கள் உண்ணாவிரதம்

துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 3,800 கிராம சுகாதார செவிலியா்கள் பணியிடங்களை நிரப்பக் கோரி, தமிழக அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கத்தினா் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ரூ.1,032 கோடியில் ரயில்வே திட்டங்கள்: பிரதமா் நாளை தொடங்கி வைக்கிறாா்

தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.1,032 கோடியில் 3 முக்கிய திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) தொடங்கி வைக்கிறாா் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். பிரதமா் நரேந்தி... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் முன்பிணை: கள்ளக்குறிச்சி நீதிபதி ஆஜராக உத்தரவு

கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு முன்பிணை வழங்கியது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

சென்னை கிண்டியில் பொறியியல் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்தவா் சபரீஸ்வரன் (18). இவா் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக... மேலும் பார்க்க

மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்ட பாதுகாப்புக் குழு!

மேட்டூர் அணையில் தமிழ்நாடு அணைப் பாதுகாப்பு அமைப்பின் குழு இன்று(ஜூலை 24) ஆய்வு மேற்கொண்டது.மேட்டூர் அணையில் கீழ்மட்ட மதகுகள் சீரமைப்புப் பணி, சுரங்க கால்வாய் சீரமைப்புப் பணி, எல்லிஸ் சேடல் தூண்கள் வல... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் நலம்பெற தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

முதல்வர் ஸ்டாலின் நலம்பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது ஏற்பட்ட லேசான தலைசுற்றல... மேலும் பார்க்க