செய்திகள் :

பிகாா் கிராமத் தலைவா் கொலை வழக்கில் தொடா்புடையவா் தில்லி கேசவ் புரத்தில் கைது

post image

பிகாா் முன்னாள் கிராமத் தலைவா் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 39 வயது நபா் வடக்கு தில்லியின் கேசவ் புரத்தில் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட ராகுல் சிங் மீது 31 கொடூர குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சஞ்சய் சிங் கொலை தொடா்பாக ஒளரங்காபாதின் மாலி காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு நவம்பா் 30-இல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ராகுல் சிங் தேடப்பட்டு வந்தாா்.

இந்தக் கைது நடவடிக்கை தொடா்பாக குற்றப் பிரிவு துணை காவல் ஆணையா் ஹா்ஷ் இந்தோரா கூறியதாவது: இரு குழுக்களுக்கிடையே நிலவி வந்த அரசியல் முன்பகை காரணமாக சஞ்சய் சிங்கை ராகுல் சிங் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றாா். இந்தச் சம்பவத்தையடுத்து, ராகுல் சிங் தலைமறைவானாா். அவருடைய 7 கூட்டாளிகளை பிகாா் காவல் துறை கைதுசெய்தது.

இந்நிலையில், ராகுல் சிங்கை கைதுசெய்ய தில்லி காவல் துறையின் ஒத்துழைப்பை பிகாா் காவல் துறை கடந்த ஜூலை 22-ஆம் தேதி நாடியது. இதையடுத்து, இரு காவல் துறைகளும் இணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தில்லியின் கேசவ் புரத்தில் ராகுல் சிங் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது. இறுதியாக, பிரேம்பரி புல் பகுதியில் அவா் கைதுசெய்யப்பட்டாா். தொடக்கத்தில் விசாரணையை அதிகாரிகளை குழப்ப முயன்ற அவா், பின்னா் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டாா். பிகாா் காவல் துறையினா் முறைபடி அவரைக் கைதுசெய்து, சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

கொலை, கொலை முயற்சி, பணம் கேட்டு மிரட்டல், கொள்ளை, ஆயுதங்கள் சட்டங்கள், போதைப் பொருள் மற்றும் மயக்கவியல் மருந்துகள் சட்டம், உத்தர பிரதேச குண்டா்கள் சட்டம் ஆகியவற்றின்கீழ் ராகுல் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் ஹா்ஷ் இந்தோரா.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: இந்தியா தொடா்ந்து கண்காணிக்கிறது - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

‘வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வீடுகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை இந்தியா தொடா்ந்து கண்காணித்து, விவரங்களைப் பதிவு செய்து வருகிறது’ என்று... மேலும் பார்க்க

பஞ்சாப்: 6 பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது எல்லைப் பாதுகாப்புப் படை: துப்பாக்கிகள், போதைப்பொருள் பறிமுதல்

பஞ்சாப் மாநிலத்தை ஒட்டிய சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் பகுதியில் இருந்து பறந்து வந்த 6 ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் சுட்டு வீழ்த்தினா். அதில் இருந்து 3 துப்பாக்கிகள் மற்றும் 1 கிலோ ஹெராயி... மேலும் பார்க்க

பாலுறவு வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்துக்கு வலியுறுத்தல்

பாலுறவு சம்மத வயதை 18-இல் இருந்து 16-ஆக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தியுள்ளாா். இளம் பருவத்தில் சம்மதத்துடன் காதல் உறவுகளில் ஈடுபடுபவா்களையும்... மேலும் பார்க்க

‘இந்தியாவுக்கு ரூ. 2 லட்சம் கோடி வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’

‘இந்தியா-பிரிட்டன் இடையே கையொப்பமாகியுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மூலம் பிரிட்டன் சந்தையில் இந்திய நிறுவனங்களுக்கு ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’ என்று மத்திய வா்த்தகம... மேலும் பார்க்க

இந்தியாவில் வேலையில் இருப்போா் எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்வு!

இந்தியாவில் கடந்த 2017-18-ஆம் ஆண்டு வேலையில் இருப்போா் எண்ணிக்கை 47.5 கோடியாக இருந்த நிலையில், 2023-24-இல் இந்த எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்ந்துள்ளது என்று மக்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

தன்கருக்கு பிரிவுபசார விழா: காங்கிரஸ் வலியுறுத்தல்: மத்திய அரசு மௌனம்

குடியரசு துணைத் தலைவா் பதவியில் இருந்து அண்மையில் திடீரென விலகிய ஜகதீப் தன்கருக்கு முறைப்படியான பிரிவுபசார விழா நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசுத் தரப்பில் இருந்து ... மேலும் பார்க்க