செய்திகள் :

அதீத கவனத்துடன் அனுப்பப்பட்ட உடல்கள்! பிரிட்டன் குடும்பத்தினர் புகார் மீது மத்திய அரசு பதில்

post image

பிரிட்டன் நாட்டுக்கு, அதீத தொழில்பாங்குடன் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக, பிரிட்டன் நாட்டவரின் குற்றச்சாட்டக்கு, மத்திய வெளியுறவு விவகாரத் துறை விளக்கம் கொடுத்துள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான பிரிட்டன் நாட்டவர்களின் உடல்களில் இரண்டு உடல்கள் மாற்றி அனுப்பிவைக்கப்பட்டதாக அவர்களது குடும்பத்தினர் அளித்த புகாருக்கு மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.

மேலும், இந்திய நாட்டு அதிகாரிகள், பிரிட்டன் நாட்டின் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அறிந்துகொள்ள முயற்சிகள் எடுத்து வருகிறார்கள் என்றும், பிரிட்டன் நாட்டவரின் உடல்கள் அதீத கவனத்துடன் அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் நாட்டிலிருந்து வந்திருக்கும் தகவலைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம், எங்கள் கவனத்துக்கு வந்திருக்கும் இந்த விவகாரம் கவலையை ஏற்படுத்துகிறது. ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில், அனைத்து விதமான கோட்பாடுகளும், தகவல் தொழில்நுட்ப முறைமைகளும் முழுமையாகப் பின்பற்றப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவு விவகாரத் துறை தெரிவித்துள்ளது.

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் உடல் தகனம்

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் உடல், புன்னப்ரா தியாகிகள் நினைவிடத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து பிற்பகல் வரவேண்டிய உடல், வழிநெடுக இருந்த கூட்டம் ... மேலும் பார்க்க

தில்லியில்... ஷேக் ஹசீனா கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து!

தில்லியில், வங்கதேசத்தின் முன்னாள் ஆளும் கட்சியான அவாமி லீக் தலைவர்கள் திட்டமிட்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் இரும்புப் பாலம் உடைந்து விபத்து!

மேற்கு வங்கத்தில் தண்ணீர் குழாய் செல்லும் இரும்புப் பாலம் உடைந்து விபத்துக்குள்ளானது. தாமோதர் நதியின் மீது பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாய்கள் மூலம் நகர்புறங்களுக்கான குடிநீர் அனுப்பப்படும் ந... மேலும் பார்க்க

மிசோரமின் அதிக வயதான பெண் மரணம்!

மிசோரமின் லாங்ட்லாய் மாவட்டத்தில், அம்மாநிலத்தின் அதிக வயதுடைய பெண் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. லாங்ட்லாய் மாவட்டத்தின், பங்குவா கிராமத்தில் வசித்த வந்தவர் ஃபாமியாங் (வயது 117). இவர், கடந்த 1908-... மேலும் பார்க்க

ஜூலை 29 -ல் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்! மோடி பங்கேற்பு

நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜூலை 29 ஆம் தேதி விவாதிக்கப்படும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, 16 மணிநேரம் நடைபெறும் விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க... மேலும் பார்க்க

ஆலப்புழாவில் அச்சுதானந்தன் உடல்! 150 கி.மீ. கடக்க 22 மணிநேரம்!

திருவனந்தபுரத்தில் நேற்று முற்பகல் புறப்பட்ட கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனின் இறுதி ஊர்வலம், 22 மணிநேரத்துக்கு பிறகு ஆலப்புழாவுக்கு வந்தடைந்தது.கேரளத்தின் முன்னாள் முதல்வரும், சிபிஎம் தல... மேலும் பார்க்க