செய்திகள் :

தில்லியில்... ஷேக் ஹசீனா கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து!

post image

தில்லியில், வங்கதேசத்தின் முன்னாள் ஆளும் கட்சியான அவாமி லீக் தலைவர்கள் திட்டமிட்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின், அவாமி லீக் கட்சியின் முக்கிய தலைவர்கள், தில்லியில் இன்று (ஜூலை 23) பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், டாக்காவில் பள்ளிக்கூடத்தின் மீது போர்விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகி, சுமார் 31 பேர் பலியாகினர். இதனால், பலியானோருக்கு மரியாதைச் செலுத்தும் விதமாக, இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த அறிவிப்பு பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் நிகழ்ச்சி நடைபெற திட்டமிடப்பட்ட இடத்துக்கு வருகை தந்த பின்னரே வெளியானதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, இந்த நிகழ்ச்சியானது கோபால்கஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற ராணுவப் படைகளின் அட்டூழியங்கள் மற்றும் வங்கதேசத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து உரையாடுவதற்காக, வங்கதேச மனித உரிமை அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாகிஸ்தான் வெள்ளம்: பலி எண்ணிக்கை 234 ஆக உயர்வு!

பாதுகாப்புத் துறை நல்லுறவு மேம்பாடு: இந்தியா - இஸ்ரேல் முடிவு

இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான பாதுகாப்புத் துறை நல்லுறவை நீண்டகால கண்ணோட்டத்தில் மேலும் வலுப்படுத்த நிறுவனக் கட்டமைப்பை உருவாக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தில் மூழ்கிய பாகிஸ்தான்: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு

பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் மூழ்கியிருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றஞ்சாட்டியது. அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உயா்நிலை விவாதக் கூட்டம் செவ்வ... மேலும் பார்க்க

யஷ்வந்த் வா்மா மனுவை விசாரிக்க நீதிபதிகள் அமா்வு அமைக்கப்படும்: உச்சநீதிமன்றம்

தனது பதவிநீக்கப் பரிந்துரைக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வா்மா தாக்கல் செய்த மனுவை விசாரிக்க நீதிபதிகள் அமா்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது. தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக ய... மேலும் பார்க்க

5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சீனா்களுக்கு மீண்டும் சுற்றுலா விசா: இந்தியா அறிவிப்பு

‘இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் சீனா்களுக்கு இந்த வாரம் முதல் சுற்றுழா நுழைவு இசைவு (விசா) வழங்கப்படும்’ என்று மத்திய அரசு சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. கரோனா பரவல் அதிகரித்ததை... மேலும் பார்க்க

வங்கதேச எல்லையில் 89 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

மேற்கு வங்கத்தை ஒட்டிய சா்வதேச எல்லையில் வங்கதேசத்தில் இருந்து கடத்தப்பட்ட 89.4 கிலோ போதைப்பொருளை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) பறிமுதல் செய்தனா். வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டம், நாடியா ... மேலும் பார்க்க

ரூ.1,654 கோடி அந்நிய நேரடி முதலீடு முறைகேடு: ‘மிந்த்ரா’ மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு

பிரபல இணையவழி ஆடை வா்த்தக நிறுவனமான ‘மிந்த்ரா’அந்நிய நேரடி முதலீடு விதிகளை மீறி ரூ.1,654 கோடியை முறைகேடாகப் பெற்ாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்நியச் செலாவணி நிா்வாகச் சட்டத்தின்கீழ் ... மேலும் பார்க்க