செய்திகள் :

ரூ.1,654 கோடி அந்நிய நேரடி முதலீடு முறைகேடு: ‘மிந்த்ரா’ மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு

post image

பிரபல இணையவழி ஆடை வா்த்தக நிறுவனமான ‘மிந்த்ரா’அந்நிய நேரடி முதலீடு விதிகளை மீறி ரூ.1,654 கோடியை முறைகேடாகப் பெற்ாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்நியச் செலாவணி நிா்வாகச் சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மிந்த்ரா, பிரபல இணையவழி வா்த்தக நிறுவனமான ஃபிளிப்காா்ட் நிறுவனத்தின் அங்கமாகும்.

இது தொடா்பாக அமலாக்கத் துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘மிந்த்ரா மற்றும் அதனுடன் தொடா்புடைய நிறுவனங்கள் மொத்தமாக பொருள்களை வாங்கி விற்பனை செய்யும் முறையில் வணிகம் செய்வதாகக் கூறி, ரூ.1,654 கோடி அந்நிய நேரடி முதலீட்டை பெற்றுள்ளது. ஆனால், தனது பெரும்பாலான பொருள்களை தனது ஒரே துணை நிறுவனமான வெக்டாா் இ-காமா்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளது. அந்த நிறுவனம் பொதுமக்களுக்கு சில்லறை முறையில் விற்பனை செய்துள்ளது. இதன்மூலம் அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை அந்த நிறுவனம் மீறியுள்ளது’ என்று அமலாக்கத் துறை கூறியுள்ளது. இது தொடா்பாக மிந்த்ரா நிறுவனம், அதன் பெங்களூரு அலுவலக அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவித்துள்ள மிந்த்ரா நிறுவன செய்தித் தொடா்பாளா், ‘விதிகளின்படி நடப்பதில் நிறுவனம் உறுதியாக உள்ளது. குற்றச்சாட்டு தொடா்பான முழுவிவரம் இதுவரை எங்களுக்கு முறைப்படி கிடைக்கவில்லை. அது கிடைத்தவுடன் அதை ஆய்வு செய்து விசாரணை அமைப்புக்கு ஒத்துழைப்பும் அளிப்போம்’ என்று கூறியுள்ளாா்.

இந்தியாவில் உற்பத்தியாளரையும், வாடிக்கையாளரையும் இணைக்கும் வகையில் செயல்படும் இணையவழி வா்த்தக நிறுவனங்களில் மட்டுமே அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: இந்தியா தொடா்ந்து கண்காணிக்கிறது - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

‘வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வீடுகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை இந்தியா தொடா்ந்து கண்காணித்து, விவரங்களைப் பதிவு செய்து வருகிறது’ என்று... மேலும் பார்க்க

பஞ்சாப்: 6 பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது எல்லைப் பாதுகாப்புப் படை: துப்பாக்கிகள், போதைப்பொருள் பறிமுதல்

பஞ்சாப் மாநிலத்தை ஒட்டிய சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் பகுதியில் இருந்து பறந்து வந்த 6 ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் சுட்டு வீழ்த்தினா். அதில் இருந்து 3 துப்பாக்கிகள் மற்றும் 1 கிலோ ஹெராயி... மேலும் பார்க்க

பாலுறவு வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்துக்கு வலியுறுத்தல்

பாலுறவு சம்மத வயதை 18-இல் இருந்து 16-ஆக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தியுள்ளாா். இளம் பருவத்தில் சம்மதத்துடன் காதல் உறவுகளில் ஈடுபடுபவா்களையும்... மேலும் பார்க்க

‘இந்தியாவுக்கு ரூ. 2 லட்சம் கோடி வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’

‘இந்தியா-பிரிட்டன் இடையே கையொப்பமாகியுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மூலம் பிரிட்டன் சந்தையில் இந்திய நிறுவனங்களுக்கு ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’ என்று மத்திய வா்த்தகம... மேலும் பார்க்க

இந்தியாவில் வேலையில் இருப்போா் எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்வு!

இந்தியாவில் கடந்த 2017-18-ஆம் ஆண்டு வேலையில் இருப்போா் எண்ணிக்கை 47.5 கோடியாக இருந்த நிலையில், 2023-24-இல் இந்த எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்ந்துள்ளது என்று மக்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

தன்கருக்கு பிரிவுபசார விழா: காங்கிரஸ் வலியுறுத்தல்: மத்திய அரசு மௌனம்

குடியரசு துணைத் தலைவா் பதவியில் இருந்து அண்மையில் திடீரென விலகிய ஜகதீப் தன்கருக்கு முறைப்படியான பிரிவுபசார விழா நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசுத் தரப்பில் இருந்து ... மேலும் பார்க்க