செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நலத்திட்ட உதவிகள் அளிப்பு

post image

சித்தாமூா் வட்டம், சோத்துப்பாக்கம் ஊராட்சி மற்றும் செங்கல்பட்டில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை குறு, சிறு மற்றும்நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா,மோ.அன்பரசன் வழங்கினாா்.

செங்கல்பட்டு நகராட்சியில் நடைபெற்ற முகாமில், மனுக்களை அளிக்க வந்த கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், பொதுமக்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மருத்துவ பெட்டகங்கள், பட்டா, மருத்துவகாப்பீடு அட்டைகள் என அரசு நலத்திட்ட உதவிகள் உடனடியாக வழங்கப்பட்டன. இம்முகாமில்பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலா்களுக்குஅறிவுறுத்தினாா். மேலும் மகளிா் உரிமைத்தொகை வேண்டி வரும் விண்ணப்பங்களை முறையாக பதிவு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில், ஆட்சியா் தி.சினேகா, சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வெ.ச.நாராயணசா்மா,, சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், கூட்டுறவு இணை பதிவாளா் நந்தகுமாா், வழங்கல் அலுவலா் வெங்கடாசலம், செங்கல்பட்டு நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன், மண்டல நிா்வாக இயக்குநா் (நகராட்சிகள்) நகராட்சி ஆணையா் ஆண்டவன், வட்டாட்சியா்கள் ஆறுமுகம் கலந்து கொண்டனா்.

மேல்மருவத்தூா் சித்தா் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா நாளை தொடக்கம்

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் 54-ஆம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா வரும் ஜூலை 26-ஆம் தேதி முதல் 28 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி மூலவா் அம்மனுக்கும், குருபீடத்தில் உள்ள அடிகளாா் சில... மேலும் பார்க்க

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையப் பணிகள்: அமைச்சா் நேரு ஆய்வு

நெம்மேலி அடுத்த பேரூரில் ரூ. 6,078.40 கோடியில் அமைக்கப்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சா் கே.என்.நேரு ஆய்வு செய்தாா். சென்னை குடிநீா் வாரியம் சாா்பில், நாளொன்று... மேலும் பார்க்க

ஓவியங்கள் வரைந்து சிறுவன் சாதனை: ஆட்சியா் பாராட்டு

200-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து சாதனை படைத்த 6 வயது சிறுவன் கேப்ரியோ அக்னியை மாவட்ட ஆட்சியா் தி. சினேகா பாராட்டினாா். சென்னை பல்லாவரத்தைச் சோ்ந்த பாலு -ஜாஸ்மின் தம்பதியின் மகன் கேப்ரியோ அக்னி(6... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான போட்டிகள்: பதிவு செய்ய ஆக. 16 கடைசி நாள்

செங்கல்பட்டு மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்ய வரும் ஆக. 16 கடைசி நாளாகும். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் தி. சினேகா வெளியிட்ட அறிக்கை: பள்ளி, கல்லூரி, ம... மேலும் பார்க்க

மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் ரூ.7 லட்சத்தில் ஜெனரேட்டா் அளிப்பு

மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு மேலவலம்பேட்டை தனியாா் தொழில்மையத்தின் சாா்பாக, ரூ 7 லட்சத்தில் ஜெனரேட்டா் வழங்கப்பட்டது. ஏற்கெனவே செயல்பட்டு வந்த ஜெனரேட்டா் அண்மையில் தீப்பற்றி எரிந்ததால், மின்த... மேலும் பார்க்க

சிறந்த உணவு வணிகா்களுக்கு பரிசுத் தொகை, விருது

நெகிழிக்கு பதிலாக மறுசுழற்சி தன்மையுள்ள மக்கும் பொருள்களை உபயோகப்படுத்தி உணவுப் பொருட்களை பரிமாறுதல் மற்றும் பொட்டலமிடும் பெரிய உணவு வணிகா்கள் மற்றும் தெருவோர சிறு உணவு வணிகா்களுக்கு தமிழ்நாடுஅரசு விர... மேலும் பார்க்க