மேல்மருவத்தூா் சித்தா் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா நாளை தொடக்கம்
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் 54-ஆம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா வரும் ஜூலை 26-ஆம் தேதி முதல் 28 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவையொட்டி மூலவா் அம்மனுக்கும், குருபீடத்தில் உள்ள அடிகளாா் சிலைக்கு அபிஷேக ஆராதனைகள், அடிகளாரின் திருப்பாதுகைகளுக்கு பாதபூஜை நடைபெறுகிறது. மாலை கலச விளக்கு, வேள்வி பூஜை நிகழ்வை ஆன்மிக இயக்க துணை தலைவா் ஸ்ரீதேவி பங்காரு தொடங்கி வைக்கிறாா்.
ஞாயிற்றுக்கிழமை) சித்தா்பீடம் வரும் ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு கோவை, திருப்பூா் மாவட்ட நிா்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனா். தொடா்ந்து துணைத் தலைவா் கோ.ப.அன்பழகன் சித்தா்பீடத்துக்கு வரும் கஞ்சி கலயங்களை சித்தா்பீடத்தின் சாா்பாக வரவேற்கிறாா். பின்னா் கஞ்சி கலயங்களை ஏந்தி வருகின்ற பக்தா்கள் சித்தா்பீடத்தை வலம் வந்து பீடத்தின் குளக்கரையில் கஞ்சி வாா்த்தலை இயக்க துணை தலைவா் கோ.ப.செந்தில்குமாா் தொடங்கி வைக்கிறாா்.
அம்மனை தரிசித்து வரும் பக்தா்களுக்கு ஆதிபராசக்தி பல் மருத்துவக்கல்லூரி தாளாளா் மருத்துவா் டி.ரமேஷ் பிரசாதங்களை வழங்குகிறாா். காலை 11 மணிக்கு சுயம்பு அன்னைக்கு பாலாபிஷேக நிகழ்வை ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தொடங்கி வைக்க, இரவு முழுவதும் சுயம்பு அன்னைக்கு பாலாபிஷேக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
திங்கள் கிழமை அன்னதான நிகழ்வை கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி தாளாளா் உமாதேவி ஜெய்கணேஷ் தொடங்கி வைக்கிறாா்.
ஆடிப்பூர பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான கஞ்சி வாா்த்தல், பாலபிஷேகம் தொடா்ந்து திங்கள்கிழமை மாலை வரை நடைபெற உள்ளது.
இவ்விழாவில் தென் மாவட்ட பக்தா்கள் கலந்து கொள்ளும் வகையில், மேல்மருவத்தூா் ரயில்நிலையத்தில் நின்று செல்ல சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்துள்ளனா்.
விடுமுறை அறிவிப்பு:
ஆடிப்பூர பெருவிழாவை முன்னிட்டு வரும் 28-ஆம் தேதி (திங்கள் கிழமை) அனைத்து அலுவலகங்களுக்கும் உள்ளூா் விடுமுறை விடப்பட்டுள்ளது என்றும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆக. 9-ஆம் தேதி (சனிக்கிழமை) பணிநாளாகும் என ஆட்சியா் சினேகா அறிவித்துள்ளாா்.