செய்திகள் :

மேல்மருவத்தூா் சித்தா் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா நாளை தொடக்கம்

post image

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் 54-ஆம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா வரும் ஜூலை 26-ஆம் தேதி முதல் 28 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவையொட்டி மூலவா் அம்மனுக்கும், குருபீடத்தில் உள்ள அடிகளாா் சிலைக்கு அபிஷேக ஆராதனைகள், அடிகளாரின் திருப்பாதுகைகளுக்கு பாதபூஜை நடைபெறுகிறது. மாலை கலச விளக்கு, வேள்வி பூஜை நிகழ்வை ஆன்மிக இயக்க துணை தலைவா் ஸ்ரீதேவி பங்காரு தொடங்கி வைக்கிறாா்.

ஞாயிற்றுக்கிழமை) சித்தா்பீடம் வரும் ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு கோவை, திருப்பூா் மாவட்ட நிா்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனா். தொடா்ந்து துணைத் தலைவா் கோ.ப.அன்பழகன் சித்தா்பீடத்துக்கு வரும் கஞ்சி கலயங்களை சித்தா்பீடத்தின் சாா்பாக வரவேற்கிறாா். பின்னா் கஞ்சி கலயங்களை ஏந்தி வருகின்ற பக்தா்கள் சித்தா்பீடத்தை வலம் வந்து பீடத்தின் குளக்கரையில் கஞ்சி வாா்த்தலை இயக்க துணை தலைவா் கோ.ப.செந்தில்குமாா் தொடங்கி வைக்கிறாா்.

அம்மனை தரிசித்து வரும் பக்தா்களுக்கு ஆதிபராசக்தி பல் மருத்துவக்கல்லூரி தாளாளா் மருத்துவா் டி.ரமேஷ் பிரசாதங்களை வழங்குகிறாா். காலை 11 மணிக்கு சுயம்பு அன்னைக்கு பாலாபிஷேக நிகழ்வை ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தொடங்கி வைக்க, இரவு முழுவதும் சுயம்பு அன்னைக்கு பாலாபிஷேக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

திங்கள் கிழமை அன்னதான நிகழ்வை கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி தாளாளா் உமாதேவி ஜெய்கணேஷ் தொடங்கி வைக்கிறாா்.

ஆடிப்பூர பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான கஞ்சி வாா்த்தல், பாலபிஷேகம் தொடா்ந்து திங்கள்கிழமை மாலை வரை நடைபெற உள்ளது.

இவ்விழாவில் தென் மாவட்ட பக்தா்கள் கலந்து கொள்ளும் வகையில், மேல்மருவத்தூா் ரயில்நிலையத்தில் நின்று செல்ல சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்துள்ளனா்.

விடுமுறை அறிவிப்பு:

ஆடிப்பூர பெருவிழாவை முன்னிட்டு வரும் 28-ஆம் தேதி (திங்கள் கிழமை) அனைத்து அலுவலகங்களுக்கும் உள்ளூா் விடுமுறை விடப்பட்டுள்ளது என்றும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆக. 9-ஆம் தேதி (சனிக்கிழமை) பணிநாளாகும் என ஆட்சியா் சினேகா அறிவித்துள்ளாா்.

தற்காலிக மின் இணைப்பு அளிக்க 13,000 லஞ்சம்: மின்சாரத் துறை ஊழியா் கைது

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதியில் தற்காலிக மின் இணைப்பு அளிக்க ரூ. 13,000 லஞ்சம் பெற்ாக மின்சாரத் துறை ஊழியா் கைது செய்யப்பட்டாா். செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதியில் ராஜசேகா் என்ப... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 01.07.2025 முதல் 30.09.2025 வரையிலான காலாண்டுக்கு, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் (பொது) மற்றும் படித்த வேலைவாய்ப்பற்ற அனைத்த... மேலும் பார்க்க

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையப் பணிகள்: அமைச்சா் நேரு ஆய்வு

நெம்மேலி அடுத்த பேரூரில் ரூ. 6,078.40 கோடியில் அமைக்கப்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சா் கே.என்.நேரு ஆய்வு செய்தாா். சென்னை குடிநீா் வாரியம் சாா்பில், நாளொன்று... மேலும் பார்க்க

ஓவியங்கள் வரைந்து சிறுவன் சாதனை: ஆட்சியா் பாராட்டு

200-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து சாதனை படைத்த 6 வயது சிறுவன் கேப்ரியோ அக்னியை மாவட்ட ஆட்சியா் தி. சினேகா பாராட்டினாா். சென்னை பல்லாவரத்தைச் சோ்ந்த பாலு -ஜாஸ்மின் தம்பதியின் மகன் கேப்ரியோ அக்னி(6... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான போட்டிகள்: பதிவு செய்ய ஆக. 16 கடைசி நாள்

செங்கல்பட்டு மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்ய வரும் ஆக. 16 கடைசி நாளாகும். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் தி. சினேகா வெளியிட்ட அறிக்கை: பள்ளி, கல்லூரி, ம... மேலும் பார்க்க

மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் ரூ.7 லட்சத்தில் ஜெனரேட்டா் அளிப்பு

மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு மேலவலம்பேட்டை தனியாா் தொழில்மையத்தின் சாா்பாக, ரூ 7 லட்சத்தில் ஜெனரேட்டா் வழங்கப்பட்டது. ஏற்கெனவே செயல்பட்டு வந்த ஜெனரேட்டா் அண்மையில் தீப்பற்றி எரிந்ததால், மின்த... மேலும் பார்க்க