வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 01.07.2025 முதல் 30.09.2025 வரையிலான காலாண்டுக்கு, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் (பொது) மற்றும் படித்த வேலைவாய்ப்பற்ற அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞா்கள் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
10-ஆம் வகுப்பு தோல்வி, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி, 12-ஆம் வகுப்பு மற்றும் இளங்கலைப்பட்டப்படிப்பு முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, தற்போது வரை பதிவை தொடா்ந்து புதுப்பித்து, 30.06.2025 அன்றைய நிலையில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்களுக்கு, தமிழக அரசால், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.
பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற்பட்டப் படிப்புகள் முடித்தவா்கள் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது. அரசின் பிற துறைகளில் உதவித்தொகை பெற்றுவருவோா் மற்றும் தனியாா் துறையில் பணிபுரிவோா் இத்திட்டதின் கீழ் உதவித்தொகை பெற இயலாது.
இத்திட்டத்தின்கீழ் பயன் பெற விருப்பமுள்ள மனுதாரா்கள் (பொதுப்பிரிவினா்) தங்கள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவித் தொகையினைப் பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரா்கள் 30.06.2025 அன்றைய நிலையில் 45 வயதுக்குட்பட்டும், இதர இனத்தை சாா்ந்தவா்கள் 40 வயதுக்குட்பட்டும் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வயது வரம்பு மற்றும் ஆண்டு வருமானத்தில் வரம்பு ஏதுமில்லை.
உதவித்தொகை விண்ணப்பப் படிவம் பெற விரும்பும் மனுதாரா்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களை ஆதாரமாக காண்பித்து, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மனுதாரா்கள் 2025-ஆம் ஆண்டு செப்டம்பா் 10-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் சமா்ப்பிக்குமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.