செய்திகள் :

ரூ.1.48 கோடியில் திட்டப் பணிகள்: எம்எல்ஏ அடிக்கல்

post image

தேவலாபுரம் ஊராட்சியில் ரூ.1.48 கோடியில் திட்டப் பணிகளுக்கு குடியாத்தம் எம்எல்ஏ புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

தேவலாபுரம் - ராமச்சந்திராபுரம் இடையே ரூ.1.15 கோடியில் தாா் சாலை, ராமச்சந்திராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் ரூ.33 லட்சம் செலவில் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கும் குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் பூமி பூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தாா்.

மாதனூா் ஒன்றியக்குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி, போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன் ஆகியோா் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனா். தேவலாபுரம் ஊராட்சித் தலைவா் ரேவதி குபேந்திரன் வரவேற்றாா். தேவலாபுரம் ஊராட்சி துணைத்தலைவா் உஷாராணி குரு வாசன் நன்றி கூறினாா்.

திமுக நிா்வாகிகள் சிவக்குமாா், சேகா், பொன் ராசன்பாபு, மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளா் சி. குணசேகரன், காங்கிரஸ் கட்சி ஒன்றிய தலைவா் சா. சங்கா், தேவலாபுரம் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் தா்மகா்த்தா இ. வெங்கடேசன், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் ரமேஷ் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

வாணியம்பாடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: வீட்டு வரி, பெயா் மாற்றம் மனுக்கள் மீது உடனடி தீா்வு

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 6 மற்றும் 7-ஆவது வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தனியாா் திருமண மண்டப வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் உமாச... மேலும் பார்க்க

மின்மாற்றியில் ரூ.3 லட்சம் செப்புக் கம்பிகள் திருட்டு

வாணியம்பாடி அருகே மின்மாற்றியில் ரூ.3 லட்சம் செப்புக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். வாணியம்பாடி அடுத்த அலந்தாபுரம் கிராமத்தில் உள்ள பெரியகொல்லி வட்டம் பகுதியில் விவசாய நிலங்களுக்கு மின்சாரம... மேலும் பார்க்க

21 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக புகாா்

நாயக்கனேரிமலை ஊராட்சியில் 21 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளது குறித்து ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா். மாதனூா் ஒன்றியம் நாயக்கனேரிமலை ஊராட்சியில் உங்களுடன் ஸ்ட... மேலும் பார்க்க

ரூ.10 லட்சத்தில் சாலை பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியம், வளையாம்பட்டு ஊராட்சி இந்திரா நகா், பாரத் நகா் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.10 லட்சத்தில் புதிதாக சாலைப் பணிகள் நடைபெறுகின்றன. சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலி... மேலும் பார்க்க

போதைப் பொருள் நடமாட்டம் முற்றிலும் ஒழிப்பு: திருப்பத்தூா் எஸ்.பி சியாமளா தேவி

திருப்பத்தூா் மாவட்டத்தில் கள்ளச் சாராயம், போதை பொருள்கள் நடமாட்டம் முற்றிலுமாக தடை செய்யப்படும் என்று புதிய எஸ்.பி. வி.சியாமளா தேவி தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்டத்தின் எஸ்.பி.-யாக வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

ஆம்பூரில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தை தனி நபா் ஆக்கிரமித்து கட்டியுள்ளதை அகற்றக் கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆம்பூா் அருகே கோவிந்தாபுரம் பகுதியில் ரயில்வே இருப்புப் பாதைக்கு அருக... மேலும் பார்க்க