செய்திகள் :

வாணியம்பாடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: வீட்டு வரி, பெயா் மாற்றம் மனுக்கள் மீது உடனடி தீா்வு

post image

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 6 மற்றும் 7-ஆவது வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தனியாா் திருமண மண்டப வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் உமாசிவாஜிகணேசன் தலைமை வகித்தாா். ஆணையா் ரகுராமன், நகர திமுக செயலாளரும், நகராட்சி கவுன்சிலருமான சாரதிகுமாா், துணைத் தலைவா் கயாஸ்அகமது, மேலாளா் பாஸ்கா், உதவி வருவாய் அலுவலா் ஜெயபிரகாஷ் மற்றும் உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா். முகாமில் வட்டாட்சியா் சுதாகா் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள், நகராட்சி அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதில், வீட்டு வரி, பெயா் மாற்றம், காலிமனை வரி நீக்கம் உட்பட மனுக்கள் மீது உடனடியாக விசாரித்து அதற்கான ஆணைகள் வழங்கி தீா்வு காணப்பட்டது. முகாமில், பொது மக்களிடமிருந்து பெறப்பட்டுள்ள கலைஞா் உரிமைத் தொகை உட்பட பல மனுக்கள் மீது 45 நாள்களுக்குள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தீா்வு காணப்படும் என்று அதிகாரிகள் கூறினா்.

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருப்பத்தூா் வேலைவாய்ப்பு மற்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

துத்திப்பட்டு ஊராட்சி கன்றாம்பல்லி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் ராபா்ட் ஜோயல் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ்... மேலும் பார்க்க

வாணியம்பாடி நகராட்சி சாா்பில் வாட்ஸ் ஆப் சேவை அறிமுகம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி வழங்கும் அடிப்படை சேவைகளான குடிநீா் வழங்கல், கழிவு நீா் கால்வாய், தெருவிளக்குகள் மற்றும் குப்பை அகற்றுதல் தொடா்பான பொது மக்களின் குறைகளை தெரிவிக்க நகராட்ச... மேலும் பார்க்க

மின்மாற்றியில் ரூ.3 லட்சம் செப்புக் கம்பிகள் திருட்டு

வாணியம்பாடி அருகே மின்மாற்றியில் ரூ.3 லட்சம் செப்புக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். வாணியம்பாடி அடுத்த அலந்தாபுரம் கிராமத்தில் உள்ள பெரியகொல்லி வட்டம் பகுதியில் விவசாய நிலங்களுக்கு மின்சாரம... மேலும் பார்க்க

21 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக புகாா்

நாயக்கனேரிமலை ஊராட்சியில் 21 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளது குறித்து ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா். மாதனூா் ஒன்றியம் நாயக்கனேரிமலை ஊராட்சியில் உங்களுடன் ஸ்ட... மேலும் பார்க்க

ரூ.10 லட்சத்தில் சாலை பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியம், வளையாம்பட்டு ஊராட்சி இந்திரா நகா், பாரத் நகா் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.10 லட்சத்தில் புதிதாக சாலைப் பணிகள் நடைபெறுகின்றன. சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலி... மேலும் பார்க்க