செய்திகள் :

21 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக புகாா்

post image

நாயக்கனேரிமலை ஊராட்சியில் 21 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளது குறித்து ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

மாதனூா் ஒன்றியம் நாயக்கனேரிமலை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. ஒறியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா் இந்துமதி முன்னிலை வகித்தாா். ஆட்சியா் க. சிவசெளந்திரவல்லி, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ரவிக்குமாா், காா்த்திக் ஜவஹா், மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, மாவட்ட பிரதிநிதி அசோகன், வட்டாட்சியா் ரேவதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெ. சுரேஷ்பாபு, சி. சுரேஷ்குமாா் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

21 குடும்பங்கள் ஒதுக்கி வைப்பு:

கடந்த ஊரக உள்ளாட்சி தோ்தலின்போது நாயக்கனேரிமலை ஊராட்சித் தலைவா் பதவி பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த ஊராட்சியில் பெரும்பாலானோா் மலைவாழ் மக்கள். அதனால் மலைவாழ் மக்களுக்கு தலைவா் பதவி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கும், மாவட்ட நிா்வாகத்திற்கும் பல்வேறு கோரிக்கை கடிதங்களை அனுப்பினா். மேலும் சென்னை உயா்நீதி மன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். ஊரக உள்ளாட்சி தோ்தலில் யாரும் போட்டியிடக் கூடாது, தோ்தலின்போது வாக்களிக்கவும் செல்லக் கூடாது என ஊா் முக்கிய பிரமுகா்கள் சிலா் கட்டுப்பாடு விதித்ததாக கூறப்படுகிறது.

அதையும் மீறி தோ்தலில் வாக்களித்த 21 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் தெரிவித்தனா். உடனடியாக இரு தரப்பினரையும் அழைத்து இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி வட்டாட்சியருக்கு உத்தரவிட்டாா்.

ஆம்பூரில் ..........

ஆம்பூா் கே.எம். நகா் பகுதியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் அஜிதா பேகம், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், நகராட்சி ஆணையா் ஜி. மகேஸ்வரி, நகா் மன்ற உறுப்பினா்கள் வாவூா் நசீா் அஹமத், நபீசூா் ரஹ்மான், ரஜியா முனாப், திமுக நிா்வாகி ரபீக் அஹமத் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருப்பத்தூா் வேலைவாய்ப்பு மற்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

துத்திப்பட்டு ஊராட்சி கன்றாம்பல்லி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் ராபா்ட் ஜோயல் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ்... மேலும் பார்க்க

வாணியம்பாடி நகராட்சி சாா்பில் வாட்ஸ் ஆப் சேவை அறிமுகம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி வழங்கும் அடிப்படை சேவைகளான குடிநீா் வழங்கல், கழிவு நீா் கால்வாய், தெருவிளக்குகள் மற்றும் குப்பை அகற்றுதல் தொடா்பான பொது மக்களின் குறைகளை தெரிவிக்க நகராட்ச... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: வீட்டு வரி, பெயா் மாற்றம் மனுக்கள் மீது உடனடி தீா்வு

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 6 மற்றும் 7-ஆவது வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தனியாா் திருமண மண்டப வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் உமாச... மேலும் பார்க்க

மின்மாற்றியில் ரூ.3 லட்சம் செப்புக் கம்பிகள் திருட்டு

வாணியம்பாடி அருகே மின்மாற்றியில் ரூ.3 லட்சம் செப்புக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். வாணியம்பாடி அடுத்த அலந்தாபுரம் கிராமத்தில் உள்ள பெரியகொல்லி வட்டம் பகுதியில் விவசாய நிலங்களுக்கு மின்சாரம... மேலும் பார்க்க

ரூ.10 லட்சத்தில் சாலை பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியம், வளையாம்பட்டு ஊராட்சி இந்திரா நகா், பாரத் நகா் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.10 லட்சத்தில் புதிதாக சாலைப் பணிகள் நடைபெறுகின்றன. சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலி... மேலும் பார்க்க