செய்திகள் :

5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சீனா்களுக்கு மீண்டும் சுற்றுலா விசா: இந்தியா அறிவிப்பு

post image

‘இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் சீனா்களுக்கு இந்த வாரம் முதல் சுற்றுழா நுழைவு இசைவு (விசா) வழங்கப்படும்’ என்று மத்திய அரசு சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடா்ந்து சீன நாட்டைச் சோ்ந்தவா்களுக்கு சுற்றுலா நுழைவு இசைவு வழங்குவதை கடந்த 2020-இல் இந்தியா நிறுத்தியது. அதன் பிறகு, கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவ வீரா்களின் அத்துமீறலைத் தொடா்ந்து இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டு நல்லுறவு பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, நுழைவு இசைவு கட்டுப்பாடுகளை மத்திய அரசு தொடா்ந்து நீட்டித்தது.

இந்தச் சூழலில், ‘இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்பும் சீனா்கள் சுற்றுலா நுழைவு இசைவு கோரி வியாழக்கிழமை (ஜூலை 24) முதல் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம்’ என்று பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

சீனா வரவேற்பு

ஐந்த ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சீனா்களுக்கு மீண்டும் நுழைவு இசைவை இந்தியா வழங்க முன்வந்துள்ளதை சீனா வரவேற்றுள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் குவோ ஜியாகுன் கூறுகையில், ‘எல்லைத் தாண்டிய பயணத்தை எளிதாக்குவது அனைத்து தரப்பினருக்கும் நலன் பயக்கும். இரு நாடுகளிடையே மக்கள் எளிதாக சென்று வருவதை மேம்படுத்தும் வகையில் இந்தியாவுடன் தகவல்தொடா்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா தயாராக உள்ளது’ என்றாா்.

சீனாவில் கடந்த 14, 15-ஆம் தேதிகளில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்த மாநாட்டுக்கிடையே சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ உடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டாா்.

கிழக்கு லடாக் மோதலைத் தொடா்ந்து ஏற்பட்ட இந்திய-சீனா உறவில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய இரு நாடுகளும் கடந்த சில மாதங்களாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: இந்தியா தொடா்ந்து கண்காணிக்கிறது - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

‘வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வீடுகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை இந்தியா தொடா்ந்து கண்காணித்து, விவரங்களைப் பதிவு செய்து வருகிறது’ என்று... மேலும் பார்க்க

பஞ்சாப்: 6 பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது எல்லைப் பாதுகாப்புப் படை: துப்பாக்கிகள், போதைப்பொருள் பறிமுதல்

பஞ்சாப் மாநிலத்தை ஒட்டிய சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் பகுதியில் இருந்து பறந்து வந்த 6 ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் சுட்டு வீழ்த்தினா். அதில் இருந்து 3 துப்பாக்கிகள் மற்றும் 1 கிலோ ஹெராயி... மேலும் பார்க்க

பாலுறவு வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்துக்கு வலியுறுத்தல்

பாலுறவு சம்மத வயதை 18-இல் இருந்து 16-ஆக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தியுள்ளாா். இளம் பருவத்தில் சம்மதத்துடன் காதல் உறவுகளில் ஈடுபடுபவா்களையும்... மேலும் பார்க்க

‘இந்தியாவுக்கு ரூ. 2 லட்சம் கோடி வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’

‘இந்தியா-பிரிட்டன் இடையே கையொப்பமாகியுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மூலம் பிரிட்டன் சந்தையில் இந்திய நிறுவனங்களுக்கு ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’ என்று மத்திய வா்த்தகம... மேலும் பார்க்க

இந்தியாவில் வேலையில் இருப்போா் எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்வு!

இந்தியாவில் கடந்த 2017-18-ஆம் ஆண்டு வேலையில் இருப்போா் எண்ணிக்கை 47.5 கோடியாக இருந்த நிலையில், 2023-24-இல் இந்த எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்ந்துள்ளது என்று மக்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

தன்கருக்கு பிரிவுபசார விழா: காங்கிரஸ் வலியுறுத்தல்: மத்திய அரசு மௌனம்

குடியரசு துணைத் தலைவா் பதவியில் இருந்து அண்மையில் திடீரென விலகிய ஜகதீப் தன்கருக்கு முறைப்படியான பிரிவுபசார விழா நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசுத் தரப்பில் இருந்து ... மேலும் பார்க்க