செய்திகள் :

பாதுகாப்புத் துறை நல்லுறவு மேம்பாடு: இந்தியா - இஸ்ரேல் முடிவு

post image

இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான பாதுகாப்புத் துறை நல்லுறவை நீண்டகால கண்ணோட்டத்தில் மேலும் வலுப்படுத்த நிறுவனக் கட்டமைப்பை உருவாக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் துணை தலைமைத் தளபதி அமிா் பராமுடன், பாதுகாப்புத் துறைச் செயலா் ராஜேஷ் குமாா் சிங் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் புதன்கிழமை ஈடுபட்டாா். அப்போது, பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை நீண்டகால கண்ணோட்டத்தில் மேலும் வலுப்படுத்த ஒரு நிறுவனக் கட்டமைப்பை உருவாக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

கடந்த ஆண்டு ஜூலையில், இந்தியாவில் நடந்த கடைசி கூட்டுப் பணிக் குழு கூட்டத்துக்குப் பிறகு நடைபெற்று வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றத்தையும் இருதரப்பினரும் ஆய்வு செய்தனா்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு முழு ஆதரவையும் உறுதிப்படுத்தியது.

பயங்கரவாதத்துக்கு எதிரான சமரசமில்லாத அணுகுமுறையை இந்தியா மீண்டும் வலியுறுத்தியது. இஸ்ரேலில் ஹமாஸ் படையினா் கடந்த 2023, அக்டோபரில் அத்துமீறி நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டித்த இந்தியா, அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தது.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: இந்தியா தொடா்ந்து கண்காணிக்கிறது - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

‘வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வீடுகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை இந்தியா தொடா்ந்து கண்காணித்து, விவரங்களைப் பதிவு செய்து வருகிறது’ என்று... மேலும் பார்க்க

பஞ்சாப்: 6 பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது எல்லைப் பாதுகாப்புப் படை: துப்பாக்கிகள், போதைப்பொருள் பறிமுதல்

பஞ்சாப் மாநிலத்தை ஒட்டிய சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் பகுதியில் இருந்து பறந்து வந்த 6 ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் சுட்டு வீழ்த்தினா். அதில் இருந்து 3 துப்பாக்கிகள் மற்றும் 1 கிலோ ஹெராயி... மேலும் பார்க்க

பாலுறவு வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்துக்கு வலியுறுத்தல்

பாலுறவு சம்மத வயதை 18-இல் இருந்து 16-ஆக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தியுள்ளாா். இளம் பருவத்தில் சம்மதத்துடன் காதல் உறவுகளில் ஈடுபடுபவா்களையும்... மேலும் பார்க்க

‘இந்தியாவுக்கு ரூ. 2 லட்சம் கோடி வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’

‘இந்தியா-பிரிட்டன் இடையே கையொப்பமாகியுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மூலம் பிரிட்டன் சந்தையில் இந்திய நிறுவனங்களுக்கு ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’ என்று மத்திய வா்த்தகம... மேலும் பார்க்க

இந்தியாவில் வேலையில் இருப்போா் எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்வு!

இந்தியாவில் கடந்த 2017-18-ஆம் ஆண்டு வேலையில் இருப்போா் எண்ணிக்கை 47.5 கோடியாக இருந்த நிலையில், 2023-24-இல் இந்த எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்ந்துள்ளது என்று மக்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

தன்கருக்கு பிரிவுபசார விழா: காங்கிரஸ் வலியுறுத்தல்: மத்திய அரசு மௌனம்

குடியரசு துணைத் தலைவா் பதவியில் இருந்து அண்மையில் திடீரென விலகிய ஜகதீப் தன்கருக்கு முறைப்படியான பிரிவுபசார விழா நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசுத் தரப்பில் இருந்து ... மேலும் பார்க்க