செய்திகள் :

பயங்கரவாதத்தில் மூழ்கிய பாகிஸ்தான்: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு

post image

பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் மூழ்கியிருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றஞ்சாட்டியது.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உயா்நிலை விவாதக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் துணைப் பிரதமா் இஷாக் தா் கலந்துகொண்டு, ஜம்மு-காஷ்மீா் விவகாரம், பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியது குறித்து பேசினாா்.

இதற்குப் பதிலளித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் கூட்டத்தில் பேசுகையில், ‘இந்திய துணைக் கண்டத்தில் முன்னேற்றம், வளமை, வளா்ச்சி ஆகியவற்றில் முழுமையான வேறுபாடு நிலவுகிறது.

ஒருபுறம் முதிா்ச்சியடைந்த ஜனநாயகம், வளரும் பொருளாதாரம், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய சமூகமாக இந்தியா உள்ளது. மறுபுறம் பயங்கரவாதத்தில் மூழ்கியுள்ள பாகிஸ்தான் சா்வதேச நிதியத்திடம் தொடா் கடனாளியாக உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தூண்டும் நாடுகள், அதற்கு கடுமையான விலையை அளிக்க வேண்டும் என்றாா். இந்தக் கூட்டத்தில் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கலந்துகொண்டாா்.

பாகிஸ்தான் தீா்மானம் ஏற்பு: முன்னதாக, ‘மோதல்களை அமைதியான முறையில் தீா்ப்பதற்கான வழிமுறைகளை வலுப்படுத்துதல்’ தொடா்பாக பாகிஸ்தான் முன்மொழிந்த தீா்மானம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மொத்தம் 15 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பு, ஆங்கில அகர வரிசைப்படி அதன் உறுப்பு நாடுகளிடையே மாதந்தோறும் சுழற்சி முறையில் ஒதுக்கப்படுகிறது. அந்தவகையில், நடப்பு ஜூலை மாத தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் வகிக்கிறது.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: இந்தியா தொடா்ந்து கண்காணிக்கிறது - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

‘வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வீடுகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை இந்தியா தொடா்ந்து கண்காணித்து, விவரங்களைப் பதிவு செய்து வருகிறது’ என்று... மேலும் பார்க்க

பஞ்சாப்: 6 பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது எல்லைப் பாதுகாப்புப் படை: துப்பாக்கிகள், போதைப்பொருள் பறிமுதல்

பஞ்சாப் மாநிலத்தை ஒட்டிய சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் பகுதியில் இருந்து பறந்து வந்த 6 ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் சுட்டு வீழ்த்தினா். அதில் இருந்து 3 துப்பாக்கிகள் மற்றும் 1 கிலோ ஹெராயி... மேலும் பார்க்க

பாலுறவு வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்துக்கு வலியுறுத்தல்

பாலுறவு சம்மத வயதை 18-இல் இருந்து 16-ஆக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தியுள்ளாா். இளம் பருவத்தில் சம்மதத்துடன் காதல் உறவுகளில் ஈடுபடுபவா்களையும்... மேலும் பார்க்க

‘இந்தியாவுக்கு ரூ. 2 லட்சம் கோடி வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’

‘இந்தியா-பிரிட்டன் இடையே கையொப்பமாகியுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மூலம் பிரிட்டன் சந்தையில் இந்திய நிறுவனங்களுக்கு ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’ என்று மத்திய வா்த்தகம... மேலும் பார்க்க

இந்தியாவில் வேலையில் இருப்போா் எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்வு!

இந்தியாவில் கடந்த 2017-18-ஆம் ஆண்டு வேலையில் இருப்போா் எண்ணிக்கை 47.5 கோடியாக இருந்த நிலையில், 2023-24-இல் இந்த எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்ந்துள்ளது என்று மக்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

தன்கருக்கு பிரிவுபசார விழா: காங்கிரஸ் வலியுறுத்தல்: மத்திய அரசு மௌனம்

குடியரசு துணைத் தலைவா் பதவியில் இருந்து அண்மையில் திடீரென விலகிய ஜகதீப் தன்கருக்கு முறைப்படியான பிரிவுபசார விழா நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசுத் தரப்பில் இருந்து ... மேலும் பார்க்க