செய்திகள் :

சென்னையில் 4 இடங்களில் விரைவில் ஏசி பேருந்து நிறுத்தம்! எங்கெங்கு?

post image

சென்னையில் புதிதாக நான்கு இடங்களில் விரைவில் குளிர்சாதன வசதியுடன் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை மாநகராட்சி வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ரூ.8 கோடியில், இந்த திட்டம் நிறைவேற்றப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் நான்கு இடங்கள் என்றால், அது கொளத்தூர், ராயபுரம், வால் டாக்ஸ் சாலை, பெரம்பூர் ஆகியவற்றில்தான் இந்த வசதி விரைவில் வரவிருக்கிறது.

தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது போல, சென்னையின் நான்கு இடங்களில், தலா 78 பேர் அமரும் வகையில் கொளத்தூர், ராயபுரம், வால் டாக்ஸ் சாலையில் பேருந்து நிறுத்தங்களும், 54 பேர் அமரும் பேருந்து நிறுத்தம் பெரம்பூரிலும் அமைக்கப்படவிருக்கிறது. இதனுடன் இருபாலருக்கும் தனித்தனி கழிப்பறைகள், குடிநீர் வசதியுடன் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பேருந்து நிறுத்தங்களைக் கட்டி முடித்து ஒப்படைக்க, ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகர வளர்ச்சிக் குழுமம் நான்கு மாத கால அவகாசம் கொடுத்துள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கோடை வெயில் காலங்களை கருத்தில் கொண்டு மக்களின் நலன் கருதி இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது.

குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து நிறுத்தங்கள், தமிழகத்துக்கு ஒன்றும் புதிதல்ல என்பதும், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த வசதி பத்து ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வரப்பட்டு, காலப்போக்கில் அதனை பராமரிக்காமல் விட்டுவிட்டதால், அந்த திட்டம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த முறையும் அதுபோல பராமரிக்காமல் விட்டுவிடக் கூடாது என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Reports have emerged that air-conditioned bus stops will soon be set up at four new locations in Chennai.

2,430 இடைநிலை ஆசிரியா்களுக்கு இன்று பணி நியமன ஆணை: துணை முதல்வா் உதயநிதி வழங்குகிறாா்

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் தோ்வு செய்யப்பட்ட 2,430 இடைநிலை ஆசிரியா்களுக்கு பணிநியமன ஆணைகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜூலை 24) வழங்கவுள்ளாா். தொடக்க கல்வித் துறையில் இடைநிலை ஆசி... மேலும் பார்க்க

ஆக. 2-ல் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 1,556 முகாம்கள் நடத்தப்படவுள்ளதாகவும், சென்னையில் மட்டு... மேலும் பார்க்க

வார இறுதி நாள்கள்: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

வார இறுதி நாள்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.இது... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ... மேலும் பார்க்க

தீபாவளிக்கு புடவை: ஜெயலலிதா வழியில் இபிஎஸ்!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தீபாவளிக்கு, பெண்களுக்கு நல்ல புடவை வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தஞ்சையில் இன்று விவசாய... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்ட அருகே ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில், மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.உடல்நிலையில் ம... மேலும் பார்க்க