செய்திகள் :

விமான விபத்து: பிரிட்டன் வந்த இரு உடல்கள் மாறிவிட்டன! உறவினர்கள் புகார்!

post image

ஏர் இந்தியா விபத்தில் பலியான பிரிட்டனைச் சேர்ந்த இருவரின் குடும்பத்தினர் தங்களுக்கு கிடைத்த உடலுடன் டிஎன்ஏ பரிசோதனை பொருந்தவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணித்த நிலையில், ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்தார்.

விமானத்தில் 12 ஊழியர்கள், பயணிகளில் இந்தியாவைச் சேர்ந்த 169 பேர், 53 பிரிட்டன் நாட்டினர், 7 போர்த்துகீசிய நாட்டினர் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஒருவர் பயணித்திருந்தனர்.

இதில், பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் மட்டும் உயிர்பிழைத்த நிலையில், மற்ற 241 பேரின் உடலும் அடையாளம் தெரியாத வகையில் எரிந்தது.

இதனால், அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அனைத்து உடல்களின் மாதிரிகளும் எடுக்கப்பட்டு, அவர்களின் உறவினர்களின் மாதிரிகளுடன் ஒப்பிட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து, அனைத்து உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்களின் உடல்கள் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்ட நிலையில், இரண்டு பேரின் உடல்கள் மாறி வந்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அவர்களின் வழக்கறிஞர் தெரிவித்திருப்பதாவது:

”இந்தியாவில் இருந்து 24 முதல் 26 உடல்கள் வந்தன. இதையடுத்து, பிரிட்டனில் மீண்டும் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், இரண்டு சடலங்கள் மட்டும் உறவினர்களின் மாதிரிகளுடன் பொருந்தவில்லை. அவர்கள் குடும்பத்தினரின் சடலத்துக்கு பதிலாக வேறு சடலம் அனுப்பப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக செய்தியை வெளியிடவில்லை.

The families of two British victims of the Air India crash have said that DNA tests found by them contradict the bodies they found.

இதையும் படிக்க : குடியரசு துணைத் தலைவர் தேர்தல் பணிகள் தொடக்கம்!

தில்லியில்... ஷேக் ஹசீனா கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து!

தில்லியில், வங்கதேசத்தின் முன்னாள் ஆளும் கட்சியான அவாமி லீக் தலைவர்கள் திட்டமிட்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் இரும்புப் பாலம் உடைந்து விபத்து!

மேற்கு வங்கத்தில் தண்ணீர் குழாய் செல்லும் இரும்புப் பாலம் உடைந்து விபத்துக்குள்ளானது. தாமோதர் நதியின் மீது பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாய்கள் மூலம் நகர்புறங்களுக்கான குடிநீர் அனுப்பப்படும் ந... மேலும் பார்க்க

மிசோரமின் அதிக வயதான பெண் மரணம்!

மிசோரமின் லாங்ட்லாய் மாவட்டத்தில், அம்மாநிலத்தின் அதிக வயதுடைய பெண் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. லாங்ட்லாய் மாவட்டத்தின், பங்குவா கிராமத்தில் வசித்த வந்தவர் ஃபாமியாங் (வயது 117). இவர், கடந்த 1908-... மேலும் பார்க்க

ஜூலை 29 -ல் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்! மோடி பங்கேற்பு

நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜூலை 29 ஆம் தேதி விவாதிக்கப்படும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, 16 மணிநேரம் நடைபெறும் விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க... மேலும் பார்க்க

அதீத கவனத்துடன் அனுப்பப்பட்ட உடல்கள்! பிரிட்டன் குடும்பத்தினர் புகார் மீது மத்திய அரசு பதில்

பிரிட்டன் நாட்டுக்கு, அதீத தொழில்பாங்குடன் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக, பிரிட்டன் நாட்டவரின் குற்றச்சாட்டக்கு, மத்திய வெளியுறவு விவகாரத் துறை விளக்கம் கொடுத்துள்ளது.ஏர் இந்தியா விமான விபத்தில் பலிய... மேலும் பார்க்க

ஆலப்புழாவில் அச்சுதானந்தன் உடல்! 150 கி.மீ. கடக்க 22 மணிநேரம்!

திருவனந்தபுரத்தில் நேற்று முற்பகல் புறப்பட்ட கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனின் இறுதி ஊர்வலம், 22 மணிநேரத்துக்கு பிறகு ஆலப்புழாவுக்கு வந்தடைந்தது.கேரளத்தின் முன்னாள் முதல்வரும், சிபிஎம் தல... மேலும் பார்க்க