செய்திகள் :

ரூ.29 லட்சம் வரி! தெருவோர வியாபாரிகளுக்கு வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்!

post image

கர்நாடக மாநிலம் பெங்களூரில், சாலையோர காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் பலருக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்துமாறு வருமான வரிதுறையிடமிருந்த வந்திருக்கும் நோட்டீஸ் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆண்டு முழுவதும் ரூ.40 லட்சம் வரை, யுபிஐ மூலம் பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாகக் கூறி ஒரு தெருவோர வியாபாரிக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, தெருவோர வியாபாரிகளுக்கு இதுபோன்ற வரியிலிருந்து விலக்கு வழங்குமாறும், இல்லாவிட்டால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

பெங்களூரில் உள்ள தெருவோர வியாபாரிகள் பலரும், யுபிஐ மூலம் பணம் பெறுவதை நிறுத்திவிட்டு, கையில் ரொக்கமாகவே வாடிக்கையாளர்கள் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதால், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பெங்களூர் வரித்துறை அலுவலகத்திலிருந்து ரூ.29 லட்சம் வரி செலுத்துமாறு காய்கறி வியாபாரி ஒருவருக்கு நோட்டீஸ் வந்திருப்பதால், என்ன செய்வது என்று தெரியாமல் கலக்கத்தில் உள்ளார்.

இது குறித்து ஏஎன்ஐ செய்தி தெரிவிப்பது என்னவென்றால், காய்கறி மற்றும் பழங்களுக்கு ஜிஎஸ்டி விதிமுறை எதுவும் இல்லை. இதுவரை நான் ஜிஎஸ்டியில் பதிவும் செய்யவில்லை. ஆனால், ஆண்டு முழுவதும் ரூ.40 லட்சத்துக்கு வியாபாரம் செய்திருப்பதாகக் கூறி ரூ. 29 லட்சம் வரி செலுத்துமாறு நோட்டீஸ் வந்துள்ளது. இது பற்றி அதிகாரிகளிடம் கேட்டால், இந்த பணம் முழுவதும் காய்கறி விற்பனையால் மட்டுமே வந்தது என நிரூபித்தால் நோட்டீஸ் திரும்பப் பெறப்படும் என்று தெரிவித்திருக்கிறார்களாம்.

தெருவோர வியாபாரிகள் பலவிதமான அபராதங்கள் செலுத்துவதாகவும், வருவாயில் பெரும்பகுதி பொருள்கள் வாங்குவது போன்ற பல விதங்களில் செலவாவதாகவும், இதுபோன்ற பெரிய தொகைகளை தெருவோர வியாபாரிகள் எவ்வாறு செலுத்துவார்கள் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

சிறு வியாபாரிகளிடமிருந்து ஜிஎஸ்டி என்ற பெயரில் வரியைப் பிடுங்குவது நல்லதல்ல என்று மாநில பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் வியாபாரிகள் யுபிஐ பரிவர்த்தனையை நிறுத்திவிட்டு ரொக்கமாக வாங்குகிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு போன்றவர்களுக்கு அரசு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதீத கவனத்துடன் அனுப்பப்பட்ட உடல்கள்! பிரிட்டன் குடும்பத்தினர் புகார் மீது மத்திய அரசு பதில்

பிரிட்டன் நாட்டுக்கு, அதீத தொழில்பாங்குடன் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக, பிரிட்டன் நாட்டவரின் குற்றச்சாட்டக்கு, மத்திய வெளியுறவு விவகாரத் துறை விளக்கம் கொடுத்துள்ளது.ஏர் இந்தியா விமான விபத்தில் பலிய... மேலும் பார்க்க

ஆலப்புழாவில் அச்சுதானந்தன் உடல்! 150 கி.மீ. கடக்க 22 மணிநேரம்!

திருவனந்தபுரத்தில் நேற்று முற்பகல் புறப்பட்ட கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனின் இறுதி ஊர்வலம், 22 மணிநேரத்துக்கு பிறகு ஆலப்புழாவுக்கு வந்தடைந்தது.கேரளத்தின் முன்னாள் முதல்வரும், சிபிஎம் தல... மேலும் பார்க்க

விமான விபத்து: பிரிட்டன் வந்த இரு உடல்கள் மாறிவிட்டன! உறவினர்கள் புகார்!

ஏர் இந்தியா விபத்தில் பலியான பிரிட்டனைச் சேர்ந்த இருவரின் குடும்பத்தினர் தங்களுக்கு கிடைத்த உடலுடன் டிஎன்ஏ பரிசோதனை பொருந்தவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்... மேலும் பார்க்க

தனிக் கவனம் பெறும் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர்! காரணம்?

உடல்பயிற்சிக் கூடங்களில் மழைக்குக் கூட ஒதுங்காமல், கிட்டத்தட்ட 26 கிலோ எடையைக் குறைத்து, பார்ப்பவர்களின் கண்களை விரியச் செய்கிறார் ஸ்ரீதேவியின் கணவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான போனி கபூர்.திரைத்துரை... மேலும் பார்க்க

எதிர்க்கட்சியினர் தொடர் அமளி! நாடாளுமன்றம் நாளைவரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், வியாழக்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் திங்கள்கிழமை காலை தொடங்கிய... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்! பணிகளைத் தொடங்கியது தேர்தல் ஆணையம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மருத்துவக் காரணங்களுக்காக அரசியலமைப்பின் பிரிவு 67(ஏ) -ன... மேலும் பார்க்க