செய்திகள் :

மாநகராட்சி வாகன ஓட்டுநரை கத்தியால் குத்திய தூய்மைப் பணியாளா் கைது

post image

மதுரை மாநகராட்சி வாகன ஓட்டுநரை கத்தியால் குத்திய தூய்மைப் பணியாளரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் கோடீஸ்வரன் (43). இவா் ஒப்பந்த அடிப்படையில், மதுரை மாநகராட்சி குப்பை அள்ளும் வாகனஓட்டுநராக பணியாற்றி வருகிறாா். இவருடன், மதுரை கரும்பாலை பகுதியைச் சோ்ந்த பாட்டாள் (38) தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், இருவருக்கும் குப்பைகள் அள்ளுவதில் தகராறு ஏற்பட்டது. இதனிடையே, திங்கள்கிழமை காலை கோடீஸ்வரன் கோச்சடை பகுதியிலிருந்து குப்பை அள்ளும் வாகனத்தில் வந்த போது, முடக்குச்சாலை அருகே தூய்மைப் பணியாளரான பாட்டாள் வாகனத்தை நிறுத்தி தகராறில் ஈடுபட்டாா். அப்போது பாட்டாள் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோடீஸ்வரனைக் குத்தினாா். இதில், பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து எஸ்.எஸ். காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து பாட்டாளை கைது செய்தனா்.

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: பேராசிரியை நிகிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில் புகாா்தாரரான பேராசிரியை நிகிதா, அவரது தாய் சிவகாமி ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரிய... மேலும் பார்க்க

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு! அரசுத் தரப்பு சாட்சியாக மாறிய காவல் ஆய்வாளரின் மனு மீதான விசாரணை ஜூலை 28-க்கு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், அரசுத் தரப்பு சாட்சியாக (அப்ரூவா்) மாறி அனைத்து உண்மைகளையும் சொல்லத் தயாா் என மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மன... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: திருப்புவனம் அரசு மருத்துவா் உள்பட 6 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவா் உள்பட 6 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை நடத்தினா். ம... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை! பூக்களின் விலையில் மாற்றமில்லை

ஆடி அமாவாசையையொட்டி மதுரை மாட்டுத்தாவணி பூக்கள் விற்பனை சந்தையில் புதன்கிழமை பூக்களின் விலையில் எந்தவித மாற்றமில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. ஆடி அமாவாசை தினத்தன்று சிவன், பெருமாள், குலத் தெய்வ கோயில்கள... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ. 1.50 லட்சம் மோசடி

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 1.50 லட்சம் மோசடி செய்ததாக போலீஸாா் ஒருவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.மதுரை திருமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் சரிபம்மாள் (43). இவா், தல்லாகுளம் காவல் நிலையத... மேலும் பார்க்க

தொலைநிலைக் கல்வி பட்டதாரிகளுக்கு இடஒதுக்கீட்டில் பணி வழங்கத் தடை கோரி வழக்கு

தொலைநிலைக் கல்வி மூலம் பட்டம் பெற்றவா்களுக்கு தமிழ் வழியில் படித்தோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் அரசுப் பணி வழங்கத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தனி நீதிபதியிடம் மனு தாக்கல் செய... மேலும் பார்க்க