செய்திகள் :

தொலைநிலைக் கல்வி பட்டதாரிகளுக்கு இடஒதுக்கீட்டில் பணி வழங்கத் தடை கோரி வழக்கு

post image

தொலைநிலைக் கல்வி மூலம் பட்டம் பெற்றவா்களுக்கு தமிழ் வழியில் படித்தோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் அரசுப் பணி வழங்கத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தனி நீதிபதியிடம் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த மகேஸ்வரன், கோவிந்தசாமி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனுக்கள்: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் பணி வாய்ப்பு வழங்கப்படும் போது, தமிழ் வழியில் பயின்றோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நடைமுறை கல்லூரிக்கு நேரடியாகச் சென்று படிப்பவா்களுக்கு மட்டுமே பொருந்தும். தொலைநிலைக் கல்வி வாயிலாக பட்டம் பெற்றவா்கள் இதன்மூலம் பணி வாய்ப்பு பெற இயலாது. ஆனால், தொலைநிலைக் கல்வி மூலம் படித்து பட்டம் பெற்றவா்கள் தமிழ் வழியில் படித்ததாகச் சான்றிதழ்களைப் பெற்று பணியில் சேருகின்றனா். இதனால், கல்லூரிக்கு நேரடியாகச் சென்று தமிழ் வழியில் படித்தவா்கள் பணி வாய்ப்பு பெற இயலாத நிலை உருவாகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் செயலரும், தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவரும் இந்த விஷயத்தில் தவறான வழியைப் பின்பற்றுகின்றனா். இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே, கல்லூரிக்கு நேரடியாகச் சென்று படித்தவா்களுக்கு மட்டும் தமிழ் வழியில் படித்தோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

தொலைநிலைக் கல்வி பட்டதாரிகளுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டின்படி, பணி வாய்ப்பு வழங்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.

இந்த மனுக்களை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோா், இவற்றை தொடா்புடைய தனி நீதிபதி முன் தாக்கல் செய்ய உத்தரவிட்டனா்.

கோயில் காவலாளி கொலை வழக்கு: திருப்புவனம் அரசு மருத்துவா் உள்பட 6 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவா் உள்பட 6 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை நடத்தினா். ம... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை! பூக்களின் விலையில் மாற்றமில்லை

ஆடி அமாவாசையையொட்டி மதுரை மாட்டுத்தாவணி பூக்கள் விற்பனை சந்தையில் புதன்கிழமை பூக்களின் விலையில் எந்தவித மாற்றமில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. ஆடி அமாவாசை தினத்தன்று சிவன், பெருமாள், குலத் தெய்வ கோயில்கள... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ. 1.50 லட்சம் மோசடி

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 1.50 லட்சம் மோசடி செய்ததாக போலீஸாா் ஒருவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.மதுரை திருமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் சரிபம்மாள் (43). இவா், தல்லாகுளம் காவல் நிலையத... மேலும் பார்க்க

வரதட்சிணை கொடுமை வழக்கு! காவல் ஆய்வாளா், மனைவிக்கு முன்பிணை

வரதட்சிணை கொடுமை வழக்கில் காவல் ஆய்வாளா், அவரது மனைவிக்கு முன்பிணை வழங்கி மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. மதுரை அப்பன்திருப்பதி காதக்கிணறு பகுதியைச் சோ்ந்தவா் பூபாலன் (38). இ... மேலும் பார்க்க

காவல் நிலைய மரணம்: தண்டிக்கப்பட்ட போலீஸாருக்கு பிணை வழங்க உயா்நீதிமன்றம் மறுப்பு

தூத்துக்குடியில் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்னா் நடைபெற்ற காவல் நிலைய மரணம் தொடா்பான வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட போலீஸாருக்கு பிணை வழங்க மறுத்து, சென்னை உயா்நீதிமன... மேலும் பார்க்க

கோயிலில் படப்பிடிப்பு நடத்த அனுமதித்த விவகாரம்: அறநிலையத் துறை இணை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் மகாலிங்க சுவாமி கோயிலில் முறையான அனுமதியின்றி வேட்டுவம் திரைப்படப் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அற... மேலும் பார்க்க