செய்திகள் :

Zepto: மறைமுக கட்டணமா? - `COD டெலிவரியில் இதான் நடக்கிறது' - மார்க்கெட்டிங் நிபுணர் சொல்வதென்ன?

post image

பிரபல விரைவு வர்த்தக தளமான ஜெப்டோ, கேஷ் ஆன் டெலிவரி (COD) ஆர்டர்களில் மறைமுகமாக கட்டணம் விதிப்பதாகவும், இதை வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக தெரிவிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்தவர் சுமுக் ராவ். ஃப்ரிடோ நிறுவனத்தில் மார்க்கெட்டிங் நிபுணராக பணியாற்றும் இவர், ஜெப்டோவின் இந்த நடைமுறையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். அவரது நண்பர் ஆன்லைனில் பணம் செலுத்த முயன்றபோது, ஆர்டர்கள் தானாகவே COD முறைக்கு மாறியதாகவும், இதனால் இந்த சிக்கல் வெளிச்சத்திற்கு வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

zepto

இது தொழில்நுட்ப கோளாறா?

X தளத்தில் இதுகுறித்து பகிர்ந்த ராவ், ஜெப்டோ தங்களின் ஆர்டர் திரையில் தந்திரமான விஷயத்தை செய்வதாக குற்றம்சாட்டினார்.

”முன்பு ’ஆன்லைன் பே’என்ற விருப்பம் முதன்மையாக இருந்த இடத்தில், இப்போது ’கேஷ்/யுபிஐ ஆன் டெலிவரி’ என்று மாற்றப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் பழக்கத்தைப் பயன்படுத்தி, அவர்களை அறியாமல் COD விருப்பத்தை தேர்ந்தெடுக்க வைக்கிறது.

முதலில் இது பாதிப்பில்லாததாக தோன்றலாம். டெலிவரி நபரிடம் யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம் என்று நினைப்பீர்கள். ஆனால், அப்படி இல்லை. இங்குதான் டார்க் பேட்டர்ன் தொடங்குகிறது.

COD முறையில் ஆர்டர் செய்யும்போது, ஜெப்டோ தானாகவே 15 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி என்ற ’கேஷ் ஹேண்ட்லிங் கட்டணத்தை’ சேர்க்கிறது. ஆனால், இந்தக் கட்டணம் ஆர்டர் செய்யும் முன் இறுதி இன்வாய்ஸில் காட்டப்படுவதில்லை. ஆர்டர் செய்யப்பட்ட பிறகு, சில வினாடிகளில் மட்டுமே இது தோன்றுகிறது” என்று அவர் கூறியிருக்கிறார்.

"விரைவு வர்த்தக செயலியில் இந்தக் கட்டணத்திற்கு என்ன அவசியம்?" என்று கேள்வி எழுப்பிய அவர், ஜெப்டோவின் இந்த நடைமுறையை "மோசமான பயிற்சி" என்றும் விமர்சித்திருக்கிறார்.

"ரூ.5000 டு ரூ.46 லட்சம் சம்பளம்; என் அம்மாதான் எனக்கு ஹீரோ" - தாயின் தியாகம் குறித்து நெகிழும் மகன்

தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், தான் மாதம் ரூ. 5,000 சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்ததிலிருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆண்டுக்கு ரூ. 46 லட்சம் உயர்ந்திருப்பதாகவும், தன்னுடைய இந்த வளர்ச்சியில் தனது... மேலும் பார்க்க

`கையெழுத்துக்காக அறையில் பூட்டி கட்டாயப்படுத்தினர்!' - கரிஷ்மா கபூர் முன்னாள் கணவரின் தாயார் புகார்!

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு லண்டனில் காலமானார். அவர் மறைவை தொடர்ந்து அவர் விட்டுச் சென்ற ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கம்பெ... மேலும் பார்க்க

மும்பை: தொடர் ரயில் குண்டுவெடிப்பு; 12 குற்றவாளிகளை விடுவிக்கும் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை!

மும்பையில் 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி 7 புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 180 பேர் வரை உயிரிழந்தனர். 700 பேர் காயம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

சிங்கப்பூர்: ஏர்போர்ட் கடைகளில் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு - சிக்கிய இந்தியர்

சிங்கப்பூர் ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் உள்ள 14 கடைகளில் இருந்து பைகள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 3.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை 38 வயது இந்தியர் ஒருவர் திருடியதாக அந்நாட்டு காவ... மேலும் பார்க்க

AI -பேச்சால் ஈர்க்கப்பட்டு, மனைவியிடம் விவாகரத்து கேட்ட 75 வயது முதியவர் - சீனாவில் நடந்த சம்பவம்

சீனாவில் 75 வயதான முதியவர் ஒருவர், ஆன்லைனில் பார்த்த ஒரு "பெண்ணின்" பேச்சால் ஈர்க்கப்பட்டு, தனது மனைவியிடம் விவாகரத்து கோரியுள்ளார்.அந்தப் "பெண்" ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) என்பது அவருக்கு தெரியவில்லை... மேலும் பார்க்க

இந்தியா - இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் முதல் ஹல்க் ஹோகன் உயிரிழப்பு வரை | ஜூலை 24 ரவுண்ட்அப்

இன்றைய நாளின் (ஜூலை 24) முக்கியச் செய்திகள்!* இங்கிலாந்தில் பிரதமர் மோடி மற்றும் அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முன்னிலையில் இரு நாடுகளுக்குமிடையே ஃப்ரீ ட்ரேட் ஒப்பந்தம் (Free Trade Agreement - FT... மேலும் பார்க்க