செய்திகள் :

AI -பேச்சால் ஈர்க்கப்பட்டு, மனைவியிடம் விவாகரத்து கேட்ட 75 வயது முதியவர் - சீனாவில் நடந்த சம்பவம்

post image

சீனாவில் 75 வயதான முதியவர் ஒருவர், ஆன்லைனில் பார்த்த ஒரு "பெண்ணின்" பேச்சால் ஈர்க்கப்பட்டு, தனது மனைவியிடம் விவாகரத்து கோரியுள்ளார்.

அந்தப் "பெண்" ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) என்பது அவருக்கு தெரியவில்லை. ஜியாங் என்ற அந்த முதியவர், AI-யின் இனிமையான பேச்சை உண்மையென நம்பி தினமும் தனது தொலைபேசியில் அதன் செய்திகளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்.

ஆனால், அந்தப் பேச்சும் உதட்டு அசைவுகளும் ஒத்திசைவாக இல்லை என்பதை அவர் கவனிக்கவில்லை. இந்த ஏஐ பேச்சால் ஈர்க்கப்பட்டு தனது மனைவியிடம் விவாகரத்து கோரியுள்ளார் ஜியாங்.

AI model

ஜியாங் மட்டுமல்லாமல் சீனாவில் பல முதியவர்கள் AI-ஆல் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களில் மூழ்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த AI-கள், அழகிய தொகுப்பாளர்கள், மாணவிகள் என பல்வேறு வடிவங்களில் உள்ளன.

இப்படி AI-ஆல் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் சீனாவில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்த விளம்பரங்கள் அவர்களைப் பொருள்கள் வாங்கத் தூண்டுகின்றன.

பல்வேறு பொருள்கள் ஏஐ மூலம் விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்தப் பொருள்கள் உண்மையில் இல்லை என்பதையும், பேசுவது AI-ஆல் உருவாக்கப்பட்டவை என்பதையும் முதியவர்கள் உணர்வதில்லை.

இதனால் அவர்கள் பணத்தை இழப்பதாக கூறப்படுகிறது. ஏஐயின் தாக்கம் உணர்ச்சி ரீதியான தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துகாட்டாக உள்ளது.

"ரூ.5000 டு ரூ.46 லட்சம் சம்பளம்; என் அம்மாதான் எனக்கு ஹீரோ" - தாயின் தியாகம் குறித்து நெகிழும் மகன்

தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், தான் மாதம் ரூ. 5,000 சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்ததிலிருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆண்டுக்கு ரூ. 46 லட்சம் உயர்ந்திருப்பதாகவும், தன்னுடைய இந்த வளர்ச்சியில் தனது... மேலும் பார்க்க

`கையெழுத்துக்காக அறையில் பூட்டி கட்டாயப்படுத்தினர்!' - கரிஷ்மா கபூர் முன்னாள் கணவரின் தாயார் புகார்!

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு லண்டனில் காலமானார். அவர் மறைவை தொடர்ந்து அவர் விட்டுச் சென்ற ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கம்பெ... மேலும் பார்க்க

Zepto: மறைமுக கட்டணமா? - `COD டெலிவரியில் இதான் நடக்கிறது' - மார்க்கெட்டிங் நிபுணர் சொல்வதென்ன?

பிரபல விரைவு வர்த்தக தளமான ஜெப்டோ, கேஷ் ஆன் டெலிவரி (COD) ஆர்டர்களில் மறைமுகமாக கட்டணம் விதிப்பதாகவும், இதை வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக தெரிவிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பெங்களூருவைச... மேலும் பார்க்க

மும்பை: தொடர் ரயில் குண்டுவெடிப்பு; 12 குற்றவாளிகளை விடுவிக்கும் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை!

மும்பையில் 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி 7 புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 180 பேர் வரை உயிரிழந்தனர். 700 பேர் காயம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

சிங்கப்பூர்: ஏர்போர்ட் கடைகளில் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு - சிக்கிய இந்தியர்

சிங்கப்பூர் ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் உள்ள 14 கடைகளில் இருந்து பைகள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 3.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை 38 வயது இந்தியர் ஒருவர் திருடியதாக அந்நாட்டு காவ... மேலும் பார்க்க

இந்தியா - இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் முதல் ஹல்க் ஹோகன் உயிரிழப்பு வரை | ஜூலை 24 ரவுண்ட்அப்

இன்றைய நாளின் (ஜூலை 24) முக்கியச் செய்திகள்!* இங்கிலாந்தில் பிரதமர் மோடி மற்றும் அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முன்னிலையில் இரு நாடுகளுக்குமிடையே ஃப்ரீ ட்ரேட் ஒப்பந்தம் (Free Trade Agreement - FT... மேலும் பார்க்க