தொடங்கியது விகடன் மாணவப் பத்திரிகையாளர் கூட்டுப் பயிற்சி முகாம்!
மும்பை: தொடர் ரயில் குண்டுவெடிப்பு; 12 குற்றவாளிகளை விடுவிக்கும் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை!
மும்பையில் 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி 7 புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 180 பேர் வரை உயிரிழந்தனர். 700 பேர் காயம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இக்குண்டு வெடிப்பு வழக்கு மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
2015 ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா ஒழுங்கிணைந்த குற்ற தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பைசல் ஷேக், ஆசிப் கான், கமல் அன்சாரி, எஹ்தேஷாம் சித்துகி மற்றும் நவீத் கான் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்தது. மேலும் ஏழு குற்றவாளிகளான முகமது சாஜித் அன்சாரி, முகமது அலி, டாக்டர் தன்வீர் அன்சாரி, மஜித் ஷாஃபி, முஸ்ஸாமில் ஷேக், சோஹைல் ஷேக் மற்றும் ஜமீர் ஷேக் ஆகியோருக்கு சதித்திட்டத்தில் ஈடுபட்டதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இத்தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

அதிர்ச்சி அடைந்த மாநில அரசு
இதனை விசாரித்த நீதிமன்றம், அரசு தரப்பு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றத்தை சரிவர ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை என்றும், குற்றவாளிகள் குற்றத்தை செய்தார்கள் என்று நம்பும்படியாக இல்லை என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களை சித்ரவதை செய்து வாக்குமூலம் வாங்கி இருப்பதாக தனது தீர்ப்பில் தெரிவித்து, 12 பேரையும் விடுதலை செய்து கடந்த செவ்வாய் கிழமை உத்தரவிட்டது. இந்த உத்தரவு மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து அவசரமாக சுப்ரீம் கோர்ட்டில் மாநில அரசு மேல்முறையீடு செய்தது. இம்மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். எனினும் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் மும்பை ரயில் குண்டு வெடிப்பில் குற்றவாளிகளை விடுதலை செய்து மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.கோடிஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, ``உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஒரு முன்னுதாரணமாகக் கருத முடியாது” என்று கூறி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்வதை நீதிமன்றம் நிறுத்தி வைக்கவில்லை. அவர்கள் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டு இருந்தால் அவர்களை மீண்டும் கைது செய்யவேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.