செய்திகள் :

சிங்கப்பூர்: ஏர்போர்ட் கடைகளில் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு - சிக்கிய இந்தியர்

post image

சிங்கப்பூர் ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் உள்ள 14 கடைகளில் இருந்து பைகள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 3.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை 38 வயது இந்தியர் ஒருவர் திருடியதாக அந்நாட்டு காவல்துறையினரால் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருடிய பொருட்களுடன் விமானத்தில் ஏறி நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். அவர் மீண்டும் சிங்கப்பூர் திரும்பியபோது, கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தகவல் வெலியாகி இருக்கிறது.

மே 29 அன்று, ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் உள்ள ஒரு கடையின் மேற்பார்வையாளர், பொருட்களை சரிபார்க்கும்போது ஒரு பை காணாமல் போனதை கவனித்திருக்கிறார்.

arrest

உடனடியாக, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, 38 வயது இந்தியர் ஒருவர் பையை எடுத்துவிட்டு பணம் செலுத்தாமல் கடையை விட்டு வெளியேறியது தெரியவந்துள்ளது.

இதுபோன்று அவர் 13 கடைகளில் இருந்தும் பொருட்களை திருடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

எவ்வாறு கைது செய்யப்பட்டார்?

அவர் சிங்கப்பூரை விட்டு வெளியேறியிருந்தாலும், காவல்துறையினர் அவரை அடையாளம் கண்டுள்ளனர். ஜூன் 1 அன்று அவர் மீண்டும் சிங்கப்பூர் திரும்பியபோது, காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

சிங்கப்பூர் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “குற்றவாளிகள் விமானத்தில் ஏறி தப்பித்து விடலாம் என்று நினைக்கக் கூடாது. கடை திருட்டு வழக்குகளை தடுக்கவும், புலனாய்வு செய்யவும் காவல்துறை தொடர்ந்து பணியாற்றும்,” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"ரூ.5000 டு ரூ.46 லட்சம் சம்பளம்; என் அம்மாதான் எனக்கு ஹீரோ" - தாயின் தியாகம் குறித்து நெகிழும் மகன்

தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், தான் மாதம் ரூ. 5,000 சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்ததிலிருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆண்டுக்கு ரூ. 46 லட்சம் உயர்ந்திருப்பதாகவும், தன்னுடைய இந்த வளர்ச்சியில் தனது... மேலும் பார்க்க

`கையெழுத்துக்காக அறையில் பூட்டி கட்டாயப்படுத்தினர்!' - கரிஷ்மா கபூர் முன்னாள் கணவரின் தாயார் புகார்!

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு லண்டனில் காலமானார். அவர் மறைவை தொடர்ந்து அவர் விட்டுச் சென்ற ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கம்பெ... மேலும் பார்க்க

Zepto: மறைமுக கட்டணமா? - `COD டெலிவரியில் இதான் நடக்கிறது' - மார்க்கெட்டிங் நிபுணர் சொல்வதென்ன?

பிரபல விரைவு வர்த்தக தளமான ஜெப்டோ, கேஷ் ஆன் டெலிவரி (COD) ஆர்டர்களில் மறைமுகமாக கட்டணம் விதிப்பதாகவும், இதை வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக தெரிவிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பெங்களூருவைச... மேலும் பார்க்க

மும்பை: தொடர் ரயில் குண்டுவெடிப்பு; 12 குற்றவாளிகளை விடுவிக்கும் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை!

மும்பையில் 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி 7 புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 180 பேர் வரை உயிரிழந்தனர். 700 பேர் காயம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

AI -பேச்சால் ஈர்க்கப்பட்டு, மனைவியிடம் விவாகரத்து கேட்ட 75 வயது முதியவர் - சீனாவில் நடந்த சம்பவம்

சீனாவில் 75 வயதான முதியவர் ஒருவர், ஆன்லைனில் பார்த்த ஒரு "பெண்ணின்" பேச்சால் ஈர்க்கப்பட்டு, தனது மனைவியிடம் விவாகரத்து கோரியுள்ளார்.அந்தப் "பெண்" ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) என்பது அவருக்கு தெரியவில்லை... மேலும் பார்க்க

இந்தியா - இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் முதல் ஹல்க் ஹோகன் உயிரிழப்பு வரை | ஜூலை 24 ரவுண்ட்அப்

இன்றைய நாளின் (ஜூலை 24) முக்கியச் செய்திகள்!* இங்கிலாந்தில் பிரதமர் மோடி மற்றும் அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முன்னிலையில் இரு நாடுகளுக்குமிடையே ஃப்ரீ ட்ரேட் ஒப்பந்தம் (Free Trade Agreement - FT... மேலும் பார்க்க