செய்திகள் :

`கையெழுத்துக்காக அறையில் பூட்டி கட்டாயப்படுத்தினர்!' - கரிஷ்மா கபூர் முன்னாள் கணவரின் தாயார் புகார்!

post image

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு லண்டனில் காலமானார். அவர் மறைவை தொடர்ந்து அவர் விட்டுச் சென்ற ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கம்பெனியை தன்வசம் கொண்டு வருவதற்கான வேலையில் அவரது மனைவி பிரியா சச்சிதேவ் ஈடுபட்டுள்ளார். இதற்காக சஞ்சய் கபூரின் தாயார் ராணி கபூரை தனி அறையில் வைத்து கையெழுத்து போடும்படி கூறி கட்டாயப்படுத்தி இருக்கின்றனர். இது தொடர்பாக ராணி கபூர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ராணி கபூர் இது தொடர்பாக சஞ்சய் கபூரின் கம்பெனியான சோனா காம்ஸ்டர் நிறுவனத்தின் போர்டுக்கு உணர்ச்சிப்பூர்வமாக எழுதி இருக்கும் கடிதத்தில், ''என்னிடம் எந்த ஒரு விளக்கமும் கொடுக்காமல் என்னை கையெழுத்து போடும்படி கட்டாயப்படுத்தினர்'' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சிலரை கம்பெனியின் பெரும்பான்மை பங்குதாரராக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பிய ராணி கபூர், `அவர்கள் தயாரித்த ஆவணங்கள் நான் தயாரித்ததாக அதில் குறிப்பிட்டுள்ளனர்.

கரிஷ்மா கபூருடன் சஞ்சய் கபூர்

மகன் இறந்ததால் நான் மிகவும் மன உலைச்சலில் இருக்கிறேன். அப்படி இருந்தும் தனி அறையில் கதவை அடைத்துக்கொண்டு என்னை கையெழுத்து போடும்படி கட்டாயப்படுத்தினர். அந்த ஆவணங்களில் என்ன இருக்கிறது என்று பல முறை கேட்டுப்பார்த்தேன். ஆனால் அவர்கள் சொல்லவில்லை. எனது வங்கிக்கணக்கைக்கூட பயன்படுத்த விடவில்லை. இருக்கும் சிறிது பணத்தில் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். எனது மகன் இறந்து ஒரு மாதத்திற்குள் இவையெல்லாம் நடக்கிறது. எனது மகனை இழந்த துக்கத்தில் இருக்கும் போது 'எதிரிகள்' எனது குடும்பத்தின் பாரம்பர்ய சொத்தை அபகரிக்க முயல்கின்றனர். கம்பெனி நிர்வாக கூட்டத்தில் குறிப்பிட்ட இயக்குனர்களை(பிரியா சச்சிதேவ்) கபூரின் பிரதிநிதியாக நியமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் என்னிடம் கலந்து ஆலோசிக்கப்படவில்லை.

நான் அதிகாரப்பூர்வமாக கம்பெனி போர்டுக்கு யாரையும் நியமிக்கவில்லை. அதோடு எனது சார்பாக சோனா கம்பெனியின் பிரதிநிதியாக செயல்பட யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார். மறைந்த சஞ்சய் கபூருக்கு மூன்று மனைவிகள் ஆவர். அவர்களில் நடிகை கரிஷ்மா கபூர் உட்பட இரண்டு பேரை விவாகரத்து செய்துவிட்டார்.

சஞ்சய் கபூரிர் பிரியா சச்சிதேவ் தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். சஞ்சய் கபூர் இறந்தவுடன் அவர் விட்டுச்சென்ற கம்பெனியில் பிரியா தன்னை ஒரு இயக்குநராக இணைத்துக்கொண்டார். இவ்விவகாரத்தில் நடிகை கரிஷ்மா கபூருக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இதனால் அவரும் இவ்விவகாரத்தில் தலையிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே சொத்து சண்டை வரும் நாள்களில் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது. சஞ்சய் கபூருக்கு அவரது கம்பெனி உட்பட தனிப்பட்ட முறையில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்து இருக்கிறது. சஞ்சய் கபூர் இறந்தபோது பிரியா சச்சிதேவ் அளித்திருந்த பேட்டியில் தனக்கு கரிஷ்மா கபூரின் இரண்டு குழந்தைகள் உட்பட 4 குழந்தைகள் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். பிரியா சச்சிதேவிற்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடந்தது. அத்திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இதில் அவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. சஞ்சய் கபூரின் சோனா கம்பெனிக்கு சர்வதேச அளவில் கிளைகள் இருக்கிறது. ஆட்டோமொபைல் துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. சீனாவில் புதிய கிளையை அந்நாட்டு நிறுவனத்துடன் இணைந்து திறக்கப்போவதாக சமீபத்தில் அந்நிறுவனம் தெரிவித்து இருந்தது.

"ரூ.5000 டு ரூ.46 லட்சம் சம்பளம்; என் அம்மாதான் எனக்கு ஹீரோ" - தாயின் தியாகம் குறித்து நெகிழும் மகன்

தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், தான் மாதம் ரூ. 5,000 சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்ததிலிருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆண்டுக்கு ரூ. 46 லட்சம் உயர்ந்திருப்பதாகவும், தன்னுடைய இந்த வளர்ச்சியில் தனது... மேலும் பார்க்க

Zepto: மறைமுக கட்டணமா? - `COD டெலிவரியில் இதான் நடக்கிறது' - மார்க்கெட்டிங் நிபுணர் சொல்வதென்ன?

பிரபல விரைவு வர்த்தக தளமான ஜெப்டோ, கேஷ் ஆன் டெலிவரி (COD) ஆர்டர்களில் மறைமுகமாக கட்டணம் விதிப்பதாகவும், இதை வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக தெரிவிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பெங்களூருவைச... மேலும் பார்க்க

மும்பை: தொடர் ரயில் குண்டுவெடிப்பு; 12 குற்றவாளிகளை விடுவிக்கும் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை!

மும்பையில் 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி 7 புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 180 பேர் வரை உயிரிழந்தனர். 700 பேர் காயம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

சிங்கப்பூர்: ஏர்போர்ட் கடைகளில் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு - சிக்கிய இந்தியர்

சிங்கப்பூர் ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் உள்ள 14 கடைகளில் இருந்து பைகள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 3.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை 38 வயது இந்தியர் ஒருவர் திருடியதாக அந்நாட்டு காவ... மேலும் பார்க்க

AI -பேச்சால் ஈர்க்கப்பட்டு, மனைவியிடம் விவாகரத்து கேட்ட 75 வயது முதியவர் - சீனாவில் நடந்த சம்பவம்

சீனாவில் 75 வயதான முதியவர் ஒருவர், ஆன்லைனில் பார்த்த ஒரு "பெண்ணின்" பேச்சால் ஈர்க்கப்பட்டு, தனது மனைவியிடம் விவாகரத்து கோரியுள்ளார்.அந்தப் "பெண்" ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) என்பது அவருக்கு தெரியவில்லை... மேலும் பார்க்க

இந்தியா - இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் முதல் ஹல்க் ஹோகன் உயிரிழப்பு வரை | ஜூலை 24 ரவுண்ட்அப்

இன்றைய நாளின் (ஜூலை 24) முக்கியச் செய்திகள்!* இங்கிலாந்தில் பிரதமர் மோடி மற்றும் அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முன்னிலையில் இரு நாடுகளுக்குமிடையே ஃப்ரீ ட்ரேட் ஒப்பந்தம் (Free Trade Agreement - FT... மேலும் பார்க்க