செய்திகள் :

கேரளத்தை உலுக்கிய வன்கொடுமை, கொலைக் குற்றவாளி! சிறையிலிருந்து தப்பிய 1 மணி நேரத்தில் கைது!

post image

கேரள மாநிலத்தில், கடந்த 2011ஆம் ஆண்டு, ஓடும் ரயிலில், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி, சிறைச் சாலையிலிருந்து தப்பிய நிலையில், ஒரு மணி நரேத்தில் பிடிபட்டார்.

கன்னூர் மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய குற்றவாளி, கன்னூர் மாவட்டம் தலப்பு பகுதியில் இருந்த காலி மனையில் இருந்த கிணற்றுக்குள் இறங்கி பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கேரள மாநிலம் கன்னூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கோவிந்தசாமி என்கிற சார்லே தாமஸ், வெள்ளிக்கிழமை அதிகாலை, தன்னுடைய அறையிலிருந்து காணாமல் போனார். தமிழ்நாட்டின் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த 49 வயது கோவிந்தசாமி, கேரளத்தின் மிக பயங்கரக் குற்றவாளிகளில் ஒருவராக உள்ளார்.

2011ஆம் ஆண்டு, 23 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று சிறையில் தண்டனையை அனுபவித்து வந்த நிலையில், காணாமல் போனதும், காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, குற்றவாளியை தேடினர்.

அவருடன் உள்ளூர் மக்களும் சேர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில், காலி மனை ஒன்றில், இருந்த கிணற்றுக்குள் இறங்கி பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது, சிறைச்சாலையிலிருந்து எவ்வாறு கோவிந்தசாமி தப்பிச் சென்றார் என்பது பற்றி விசாரணை நடத்த, உயர் நிலைக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவிந்தசாமி ஒரு மாற்றுத்திறனாளி என்பதும், அவர் கைத்தடி வைத்தே நடப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலும், அவர் கடுமையான பாதுகாப்பு அரண்களைத் தாண்டி, சிறையிலிருந்து தப்பிச் சென்றிருப்பது, சிறைத் துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவிந்தசாமி சிறையிலிருந்து தப்பிச் சென்றிருப்பதால், சிறைத் துறையில் இருந்த கண்காணிப்புக் குறைபாடுகள் மற்றும் சிறைத்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சிறைத் துறை அறிக்கை அளிக்கவும் மாநில உள்துறை உத்தரவிட்டுள்ளது.

குற்றத்தின் பின்னணி?

கடந்த 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி வல்லதோல் நகர் ரயில் நிலையத்தின் பொதுப் பெட்டியில் ஒரு பெண் ஏறியிருக்கிறார். அவரை, அதேப் பேட்டியில் ஏறிய கோவிந்தசாமி, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார். அவர் கத்திக் கூச்சலிடவே, அப்பெண்ணின் தலையை பலமாக இடித்து மயக்கமடையச் செய்து, ரயிலிலிருந்து தள்ளிவிட்டிருக்கிறார்.

மறுப்பக்கம் ஓடும் ரயிலிருந்து கோவிந்தசாமியும் குதித்திருக்கிறார். கீழே விழுந்து ரத்த வெள்ளத்திலிருந்த அப்பெண்ணை கோவிந்தசாமி, பாலியல் வன்கொடுமை செய்து, அவரிடமிருந்த செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்பியிருக்கிறார்.

இந்த ரயிலில், மற்றொரு பெட்டியில் பயணித்த பயணிகள், பெண்ணின் அழுகுரல் கேட்டதாக, அடுத்த ரயில் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், அவர்கள் விரைந்து சென்று உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவமனை தரப்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டும், தொடர்ந்து ஆறு நாள்கள் போராட்டத்துக்குப் பின், அப்பெண் சிகிச்சைப் பலனின்றி பலியானார்.

இந்த வழக்கில், குற்றவாளி, கோவிந்தசாமிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கன்னூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

In the state of Kerala, a convicted murderer who raped and murdered a woman on a moving train in 2011 was caught a few hours after escaping from prison.

கேரள பாலியல் வன்கொடுமை, கொலைக் குற்றவாளி தப்பியது எப்படி? அதிர்ச்சியில் சிறைத்துறை

கேரள மாநிலத்தில், கடந்த 2011ஆம் ஆண்டு, ஓடும் ரயிலிலிருந்து பெண்ணை வெளியே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி, கன்னூர் சிறையிலிருந்து தப்பிச் சென்றது எப்படி என்று தெரிய... மேலும் பார்க்க

நீதிபதி வா்மா பதவிநீக்க தீா்மானம் மக்களவையில் கொண்டு வரப்படும்: அமைச்சா் கிரண் ரிஜிஜு தகவல்

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் உயா்நீதிமன்ற நீதிபதி வா்மாவை பதவி நீக்கம் செய்யும் தீா்மானம் மக்களவையில் அனுமதிக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்ச... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் பதவி: தோ்தல் அதிகாரிகள் நியமனம்

நாட்டின் 17-ஆவது குடியரசு துணைத் தலைவா் தோ்தலை நடத்தும் தோ்தல் அதிகாரியாக மாநிலங்களவைச் செயலா் பி.சி.மோடி நியமிக்கப்பட்டுள்ளாா். மத்திய சட்டம் மற்றும் நிதித் துறை அமைச்சகம் மற்றும் மாநிலங்களவை துணைத... மேலும் பார்க்க

யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்துகள் முடக்கம்

யூகோ வங்கி முன்னாள் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் (சிஎம்டி) சுபோத் குமாா், அவரின் குடும்ப உறுப்பினா்களுக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது. மேற்கு வங்கி மாநிலம் க... மேலும் பார்க்க

மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு

‘மாலத்தீவு நாட்டுக்கு ரூ. 4,850 கோடி கடன் வழங்க இந்தியா தீா்மானித்துள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மேலும், ‘இந்தியா-மாலத்தீவு இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய... மேலும் பார்க்க

கல்வி நிலையங்களில் மாணவா் தற்கொலைகள்: 15 நெறிமுறைகளை வெளியிட்டது உச்சநீதிமன்றம்

கல்வி நிலையங்களில் அதிகரித்துவரும் மாணவா்கள் தற்கொலைகள் மற்றும் அவா்களின் மனநல பாதிப்புகளைத் தடுக்க உச்சநீதிமன்றம் 15 நெறிமுறைகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகி... மேலும் பார்க்க