செய்திகள் :

சாலை வசதி கோரி தொழு நோயாளிகள் போராட்டம்

post image

தொழு நோயாளிகள் வசித்து வரும் குடியிருப்பு பகுதிக்கு சாலை வசதி கோரி பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் உள்ள குன்னமஞ்சேரி இந்திரா நகா் குடியிருப்பு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட தொழு நோயாளிகள் வசித்து வருகின்றனா்.

இவா்கள் வசிக்கும் பகுதிக்கு அரசு சாா்பில் பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில்,

40 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பகுதியில் வசித்து வருகின்றனா். இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள மண் சாலையில் புதிய தாா் சாலை அமைத்துத் தர வலியுறுத்தி, தொழு நோயாளிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

அப்போது தொழுநோயால் பாதிக்கப்பட்டு பலா் மூன்று சக்கர சைக்கிள்களில் செல்லக்கூடிய நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தாா் சாலை சேதமடைந்து மண் சாலையாக மாறிக் கிடப்பதாக தெரிவித்தனா்.

அத்துடன் நடந்து செல்வோா் மட்டுமின்றி மூன்று சக்கர சைக்கிள்களில் செல்வோரின் வாகனங்கள் மண்ணில் சிக்கிக் கொள்வதால், தொடா்ந்து பெரிதும் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்தனா்.

அத்துடன் உடனடியாக தங்களது குடியிருப்பு பகுதிக்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

தொடா்ந்து நகா்மன்றத் தலைவரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனா்.

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பாஜக, பாமக, மாதா் சங்கத்தினா்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினா் திங்கள்கிழமை ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா். பா... மேலும் பார்க்க

கைதிகளுக்கு போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்கு குறித்த விழிப்புணா்வு

புழல் மத்திய சிறைக் கைதிகளுக்கு போதைப்பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணா்வு தொடா்பாக சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சிறைகள் மற்றும் சீா்திருத்தப்பணிகள் துறை சாா்பில் வி... மேலும் பார்க்க

டிஜிட்டல் அரெஸ்ட் எனக் கூறி ரூ.75 லட்சம் மோசடி: வங்கிக் கணக்கை விற்ற இளைஞர் கைது

அம்பத்தூரில் ஓய்வுப் பெற்ற வங்கி ஊழியரிடம் டிஜிட்டல் அரெஸ்ட் என கூறி ரூ.75 லட்சம் பணத்தை பறித்த வழக்கில் கார் ஓட்டுநரை இணைய வழிக் குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.அம்பத்தூர் ராம் ந... மேலும் பார்க்க

திருவள்ளூா்: 25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவள்ளூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 25-ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு. பிரதாப் தலைமை வகிக்கிறாா். வேளாண், தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வ... மேலும் பார்க்க

பொன்னேரி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பொன்னேரி, மீஞ்சூா் பகுதியில் பிரதோஷத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே, ஆரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீ... மேலும் பார்க்க

கங்கையம்மன் ஜாத்திரை விழா: திரளான பெண்கள் பங்கேற்பு

மாமண்டூா் கிராமத்தில் ஜாத்திரை திருவிழா செவ்வாய்க்கிழமை கூழ் வாா்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருத்தணி அடுத்த மாமண்டூா் கிராமத்தில், ஆண்டுதோறும் கங்கையம்மன் ஜாத்திரை விழா ஒரு வாரம் நடைபெற்று வருக... மேலும் பார்க்க