செய்திகள் :

டிஜிட்டல் அரெஸ்ட் எனக் கூறி ரூ.75 லட்சம் மோசடி: வங்கிக் கணக்கை விற்ற இளைஞர் கைது

post image

அம்பத்தூரில் ஓய்வுப் பெற்ற வங்கி ஊழியரிடம் டிஜிட்டல் அரெஸ்ட் என கூறி ரூ.75 லட்சம் பணத்தை பறித்த வழக்கில் கார் ஓட்டுநரை இணைய வழிக் குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

அம்பத்தூர் ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் ஓய்வுப் பெற்ற வங்கி ஊழியர். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரவியை தொடர்பு கொண்டு மும்பையில் இருந்து சிபிஐ அதிகாரி பேசுவதாக கூறியுள்ளனர். அவர்கள் பிரபுவிடம் போதைப் பொருள் கடத்தலுக்கு உங்களுடைய ஆதார் முறைகேடாக பயன்படுத்தி இருப்பதாக கூறியுள்ளனர்.

மேலும், இது தொடர்பாக உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக மிரட்டியுள்ளனர். இதனை நாங்கள் செய்யாமல் இருக்க நாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புமாறு கூறியுள்ளனர்.

இதையடுத்து இவர் கொஞ்சம், கொஞ்சமாக 10 மேற்பட்ட பரிவர்த்தனைகளில் ரூ.75 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார். இதன் பிறகு அவர் ஏமாற்றப்பட்டது அறிந்து ஆவடி காவல் ஆணையரகத்தில் கடந்த ஜனவரி மாதம் புகார் அளித்துள்ளார். காவல் ஆய்வாளர் சுதாகர் தலைமையில் போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் அஜ்னாஸ் (27) என்பவரது வங்கிக் கணக்கில் இருந்து ரவியின் குறிப்பிட்ட தொகை மோசடி பேர்வழிகளுக்கு சென்று இருப்பதும், இவர் தனது வங்கிக் கணக்கை ரூ.10,000 பணத்தை பெற்றுக் கொண்டு விற்பனை செய்ததும், இவரது வங்கி கணக்கிலிருந்து பல மோசடி நபர்களுக்கு பணம் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் கேரளா மாநிலம் சென்று அஜ்னாஜை (படம்) கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

சாலை வசதி கோரி தொழு நோயாளிகள் போராட்டம்

தொழு நோயாளிகள் வசித்து வரும் குடியிருப்பு பகுதிக்கு சாலை வசதி கோரி பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் உள்ள கு... மேலும் பார்க்க

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பாஜக, பாமக, மாதா் சங்கத்தினா்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினா் திங்கள்கிழமை ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா். பா... மேலும் பார்க்க

கைதிகளுக்கு போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்கு குறித்த விழிப்புணா்வு

புழல் மத்திய சிறைக் கைதிகளுக்கு போதைப்பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணா்வு தொடா்பாக சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சிறைகள் மற்றும் சீா்திருத்தப்பணிகள் துறை சாா்பில் வி... மேலும் பார்க்க

திருவள்ளூா்: 25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவள்ளூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 25-ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு. பிரதாப் தலைமை வகிக்கிறாா். வேளாண், தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வ... மேலும் பார்க்க

பொன்னேரி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பொன்னேரி, மீஞ்சூா் பகுதியில் பிரதோஷத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே, ஆரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீ... மேலும் பார்க்க

கங்கையம்மன் ஜாத்திரை விழா: திரளான பெண்கள் பங்கேற்பு

மாமண்டூா் கிராமத்தில் ஜாத்திரை திருவிழா செவ்வாய்க்கிழமை கூழ் வாா்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருத்தணி அடுத்த மாமண்டூா் கிராமத்தில், ஆண்டுதோறும் கங்கையம்மன் ஜாத்திரை விழா ஒரு வாரம் நடைபெற்று வருக... மேலும் பார்க்க