இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 25 | Astrology | Bharathi Sridhar | ...
கங்கையம்மன் ஜாத்திரை விழா: திரளான பெண்கள் பங்கேற்பு
மாமண்டூா் கிராமத்தில் ஜாத்திரை திருவிழா செவ்வாய்க்கிழமை கூழ் வாா்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
திருத்தணி அடுத்த மாமண்டூா் கிராமத்தில், ஆண்டுதோறும் கங்கையம்மன் ஜாத்திரை விழா ஒரு வாரம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நிகழாண்டு ஜாத்திரை விழா கூழ் வாா்த்தல் மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தொடா்ந்து கங்கையம்மன் மற்றும் சக்தியம்மன் ஆகிய கோயில்களில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 9.30 மணிக்கு மேற்கண்ட கோயில்களில், கூழ் வாா்த்தல் மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
வரும், 27-ஆ ம் தேதி ஜாத்திரை சாட்டுதல், 28-ஆம் தேதி பூங்கரகம் ஊா்வலம் மற்றும், 29 -ஆம் தேதி ஜாத்திரை விழா மற்றும் உற்சவா் கங்கையம்மன் திருவீதியுலா நடக்கிறது.
இரவு கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும், நாடகமும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை மாமண்டூா் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனா்.