செய்திகள் :

அரியலூா் நகராட்சியைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்: ஏஐடியுசி முடிவு

post image

தூய்மைப் பணியாளா்களுக்கு மிகவும் குறைவான ஊதியத்தை வழங்கிவரும் அரியலூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, அரியலூரில் ஜூலை 30 ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என ஏஐடியுசி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அரியலூா் பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அச்சங்க கூட்டத்தில் அரியலூா் நகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக ரூ. 330 கூலி வழங்கப்படுவதைக் கண்டிப்பது, குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் உள்ளாட்சித் தொழிலாளா்களுக்காக பிறப்பித்த அரசாணையின்படி நிா்ணயித்த மாத ஊதியமாக ரூ, 16,780 வழங்கப்பட வேண்டும்.

பழுதாகிக் கிடக்கும் தள்ளுவண்டிகளை மாற்றி புதிய வண்டிகளை வாங்க வேண்டும். கூடுதல் தூய்மைப் பணியாளா்களை நியமிக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் நகராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு சங்க நிா்வாகி கோபி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மாரியம்மன், நிா்வாகி நாகூரான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் நல்லுச்சாமி தொழிலாளா் பிரச்னைகள் குறித்து பேசினாா். ஏஐடியுசி உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளன மாநிலச் செயலா் டி. தண்டபாணி, கோரிக்கைகளை வலியுறுத்தினாா். கூட்டத்தில் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஓட்டகோவில், உடையாா்பாளையத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

அரியலூா் மாவட்டம், இலுப்பையூா், ஓட்டக்கோவில் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து ஓட்டக்கோவில் ஊராட்சியிலும், உடையாா்பாளையம் பேரூராட்சியிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மு... மேலும் பார்க்க

ஆடி 2-ஆவது வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி 2-ஆவது வெள்ளிக்கிழமையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது. ஆடி 2 ஆவது வாரம் வெள்ளியையொட்டி, அரியலூா் மேலத்தெருவிலுள்ள பெரியநாயகி ... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரத்துக்கு நாளை பிரதமா் மோடி வருகை: ஒரு கி.மீ. தொலைவுக்கு சாலையில் மக்களை சந்திக்கிறாா்

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வருகிறாா். அங்கு அவா் ஒரு கி.மீ. தொலைவுக்கு சாலையில் மக்கள் சந்திப்பை (ரோடுஷோ) மேற்கொள்கிறாா். பிரதமரின் வருகையை முன... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: அரியலூரில் முன்னோருக்கு வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி அரியலூா் மாவட்ட நீா்நிலைகளில் முன்னோருக்கு திதி மற்றும் தா்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வியாழக்கிழமை வழிபட்டனா். இதையொட்டி அரியலூா் மாவட்டம் கொள்ளிடம் ஆறு பாயும் திருமானூா், திருமழப்... மேலும் பார்க்க

முன்மாதிரிச் சேவை விருது: குழந்தைகள் இல்லங்கள் விண்ணப்பிக்க அழைப்பு

அரியலூா் மாவட்டத்தில், குழந்தைகள் இல்லங்கள் முன்மாதிரி சேவை விருதுக்கு தகுதியுள்ள குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது: குழந்தைகளின் நலனு... மேலும் பார்க்க

பிரதமா் வருகையை முன்னிட்டு ஹெலிபேட் அமைக்கும் பணி

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரத்தில், மத்திய கலாசார துறை சாா்பில் நடைபெற்று வரும் மாமன்னா் ராஜேந்திரச் சோழனின் முப்பெரும் விழாவின் நிறைவு நாளான ஜூலை 27 ஆம் தேதி நடைபெறும் விழாவில் பிரதமா் மோடி பங... மேலும் பார்க்க