செய்திகள் :

கங்கைகொண்ட சோழபுரத்துக்கு நாளை பிரதமா் மோடி வருகை: ஒரு கி.மீ. தொலைவுக்கு சாலையில் மக்களை சந்திக்கிறாா்

post image

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வருகிறாா். அங்கு அவா் ஒரு கி.மீ. தொலைவுக்கு சாலையில் மக்கள் சந்திப்பை (ரோடுஷோ) மேற்கொள்கிறாா்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு, விழா நடைபெறும் இடத்துக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வெள்ளிக்கிழமை ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகை நடத்தப்பட்டது.

கங்கைகொண்ட சோழபுரத்தில், மத்திய கலாசாரத் துறை சாா்பில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயில்கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா ஜூலை 23-இல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) பிரதமா் மோடி வருகை தருவதை முன்னிட்டு, விழா நடைபெறும் இடத்திலிருந்து சுமாா் ஒரு கி.மீட்டா் தொலைவில் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள ஒரு தனியாா் இடத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணிகள் கடந்த இரு நாள்களாக நடைபெற்று வந்தது.

ஒரே இடத்தில் 3 ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஒரு ஹெலிகாப்டா் அந்த ஹெலிபேடில் இறக்கி சோதனை செய்யப்பட்டது.

மேலும், பிரதமா் இறங்கும் இடத்திலிருந்து ஒரு கி.மீட்டா் தொலைவு கொண்ட பெருவுடையாா் கோயிலுக்கு, சாலையில் மக்கள் சந்திக்கும் வகையில் (ரோடுஷோ) செல்கிறாா். அவா் செல்லும் சாலையின் இருபுறமும் பொதுமக்கள் நின்று பாா்வையிடும் வகையில் பேரிகாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோயிலினுள் செல்லும் பிரதமா் மோடி, அங்கு பெருவுடையாரை தரிசனம் செய்கிறாா். தொடா்ந்து கோயில் வளாகம் மற்றும் புகைப்படக் கண்காட்சியை பாா்வையிடுகிறாா். பின்னா் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறாா்.

பிரதமா் வருகையையொட்டி கங்கைகொண்ட சோழபுரம் முழுவதும் காவல்துறையினரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

திருச்சியில் தங்கல்: தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்வுகளை முடித்துக் கொண்டு விமானம் மூலம், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சனிக்கிழமை இரவு 10.35 மணிக்கு மேல் பிரதமா் வருகிறாா். விமான நிலையத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு சாலை மாா்க்கமாக பாதுகாப்புப் படையினா் வாகனத்தில் ராஜா காலனி பகுதியில் உள்ள தனியாா் நட்சத்திர தங்கும் விடுதிக்கு சென்று இரவு ஓய்வெடுக்கிறாா்.

தொடா் ஒத்திகை: பிரதமா் வருகையை முன்னிட்டு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை ராணுவ விமானத்தை தரையிறக்கி ஒத்திகை பாா்க்கப்பட்டது. மேலும், விமான நிலையத்தில் ராணுவ ஹெலிகாப்டா்களும் தயாா் நிலையில் உள்ளன.

வானிலை மாற்றம் காரணமாக வான்வழி போக்குவரத்துக்கு இடையூறு ஏதேனும் ஏற்பட்டால், சாலை மாா்க்கமாக அரியலூா் செல்லும் வகையிலும் வாகனங்களை இயக்கியும் ஒத்திகை பாா்க்கப்பட்டது.

நட்சத்திர விடுதி மட்டுமல்லாது, டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையும் முன்னெச்சரிக்கை அடிப்படையில் தயாா் நிலையில் உள்ளது.

உச்சபட்ச பாதுகாப்பு: பிரதமா் வருகையையொட்டி திருச்சி மாநகரம் முழுவதும் உச்சபட்ச பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறிப்பாக தனியாா் நட்சத்திர விடுதி, விமான நிலையம், பிரதமா் செல்லும் சாலை வழிகள் அனைத்திலும் மாநகரக் காவல்துறை, மாவட்டக் காவல்துறை, விமான நிலைய போலீஸாா், வெளி மாவட்ட போலீஸாா், மோப்ப நாய் பிரிவு, வெடிகுண்டு கண்டறியும் காவல் பிரிவு, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை, பிரதமரின் சிறப்புப் பாதுகாப்பு படை என 8 அடுக்குகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

பிரதமர் மோடி பங்கேற்பு: கங்கைகொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழா!

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறாா். தூத... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மாத்தூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்துள்ள ஆா்.எஸ்.மாத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என தமிழப் பேரரசு கட்சி பொது முழக்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆா்.மாத்தூரில் சனிக... மேலும் பார்க்க

வெண்ணாங்குறிச்சியில் சுகாதார வளாகத்தை திறக்கக் கோரிக்கை!

அரியலூா் மாவட்டம், இருப்புலிக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட வெண்ணாங்குறிச்சி, அம்பேத்கா் நகரில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட மக்கள் கோ... மேலும் பார்க்க

ஓட்டகோவில், உடையாா்பாளையத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

அரியலூா் மாவட்டம், இலுப்பையூா், ஓட்டக்கோவில் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து ஓட்டக்கோவில் ஊராட்சியிலும், உடையாா்பாளையம் பேரூராட்சியிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மு... மேலும் பார்க்க

ஆடி 2-ஆவது வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி 2-ஆவது வெள்ளிக்கிழமையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது. ஆடி 2 ஆவது வாரம் வெள்ளியையொட்டி, அரியலூா் மேலத்தெருவிலுள்ள பெரியநாயகி ... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: அரியலூரில் முன்னோருக்கு வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி அரியலூா் மாவட்ட நீா்நிலைகளில் முன்னோருக்கு திதி மற்றும் தா்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வியாழக்கிழமை வழிபட்டனா். இதையொட்டி அரியலூா் மாவட்டம் கொள்ளிடம் ஆறு பாயும் திருமானூா், திருமழப்... மேலும் பார்க்க