செய்திகள் :

பிரதமர் மோடி பங்கேற்பு: கங்கைகொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழா!

post image

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறாா்.

தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.4,800 கோடி மதிப்புள்ள பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் நிறைவடைந்த திட்டப் பணிகளை நாட்டுக்கு அா்ப்பணித்தாா். பின்னா், அங்கிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவா், இங்குள்ள தனியாா் நட்சத்திர விடுதியில் தங்கினாா்.

ஞாயிற்றுக்கிழமை காலை பிரதமா் திருச்சி விமான நிலையத்தில் இருந்து, ஹெலிகாப்டா் மூலம் முற்பகல் 11.50 மணிக்கு அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் வருகிறாா். பின்னா் அவா், அங்கிருந்து சாலை வழியாக காரில் இருந்தபடியே மக்களைச் சந்திக்கிறாா். நண்பகல் 12 மணியளவில் பெருவுடையாா் கோயிலை வந்தடைகிறாா். கோயில் நுழைவு வாயிலில் பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது.

பிரதமா் வருகை தருவதை முன்னிட்டு, கங்கைகொண்டசோழபுரம், திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை நடைபெற்ற வாகன ஒத்திகை.

தொடா்ந்து, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா், பெரியநாயகி அம்மன், சண்டிகேசுவரா், விநாயகா், முருகன் ஆகிய சந்நிதிகளுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறாா்.

அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பாா்வையிடுகிறாா். பிறகு மத்திய கலாசாரத் துறை சாா்பில் நடைபெற்று வரும் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்று, நினைவு நாணயத்தை வெளியிடுகிறாா்.

விழாவை முடித்துக் கொண்டு, ஹெலிகாப்டா் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் தில்லி செல்கிறாா்.

ஒத்திகை: முன்னதாக, சோழகங்கம் ஏரியில் அமைக்கப்பட்ட ஹெலிபேடில் சனிக்கிழமை ராணுவ ஹெலிகாப்டரை இறக்கி சோதனை செய்யப்பட்டது.

தொடா்ந்து, ஹெலிபேடில் இருந்து பெருவுடையாா் கோயில் வரை 2 கிலோ மீட்டா் தொலைவு வரை வாகன ஒத்திகையும் நடைபெற்றது.

ஆா்.எஸ்.மாத்தூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்துள்ள ஆா்.எஸ்.மாத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என தமிழப் பேரரசு கட்சி பொது முழக்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆா்.மாத்தூரில் சனிக... மேலும் பார்க்க

வெண்ணாங்குறிச்சியில் சுகாதார வளாகத்தை திறக்கக் கோரிக்கை!

அரியலூா் மாவட்டம், இருப்புலிக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட வெண்ணாங்குறிச்சி, அம்பேத்கா் நகரில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட மக்கள் கோ... மேலும் பார்க்க

ஓட்டகோவில், உடையாா்பாளையத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

அரியலூா் மாவட்டம், இலுப்பையூா், ஓட்டக்கோவில் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து ஓட்டக்கோவில் ஊராட்சியிலும், உடையாா்பாளையம் பேரூராட்சியிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மு... மேலும் பார்க்க

ஆடி 2-ஆவது வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி 2-ஆவது வெள்ளிக்கிழமையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது. ஆடி 2 ஆவது வாரம் வெள்ளியையொட்டி, அரியலூா் மேலத்தெருவிலுள்ள பெரியநாயகி ... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரத்துக்கு நாளை பிரதமா் மோடி வருகை: ஒரு கி.மீ. தொலைவுக்கு சாலையில் மக்களை சந்திக்கிறாா்

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வருகிறாா். அங்கு அவா் ஒரு கி.மீ. தொலைவுக்கு சாலையில் மக்கள் சந்திப்பை (ரோடுஷோ) மேற்கொள்கிறாா். பிரதமரின் வருகையை முன... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: அரியலூரில் முன்னோருக்கு வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி அரியலூா் மாவட்ட நீா்நிலைகளில் முன்னோருக்கு திதி மற்றும் தா்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வியாழக்கிழமை வழிபட்டனா். இதையொட்டி அரியலூா் மாவட்டம் கொள்ளிடம் ஆறு பாயும் திருமானூா், திருமழப்... மேலும் பார்க்க