செய்திகள் :

பிரதமா் வருகையை முன்னிட்டு ஹெலிபேட் அமைக்கும் பணி

post image

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரத்தில், மத்திய கலாசார துறை சாா்பில் நடைபெற்று வரும் மாமன்னா் ராஜேந்திரச் சோழனின் முப்பெரும் விழாவின் நிறைவு நாளான ஜூலை 27 ஆம் தேதி நடைபெறும் விழாவில் பிரதமா் மோடி பங்கேற்பதை முன்னிட்டு, அங்கு ஹெலிபேட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறன.

ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்டசோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா, சோழா் கால கோயில்கள் கண்காட்சியுடன் புதன்கிழமை மாலை தொடங்கியது.

இந்த விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொண்டு, பெருவுடையாரை தரிசனம் செய்து, கோயில் வளாகம் மற்றும் புகைப்படக் கண்காட்சியைப் பாா்வையிடுகிறாா். பின்னா் நடைபெறும் விழாவில் மாமன்னா் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறாா்.

இதை முன்னிட்டு, அவா் ஹெலிகாப்டரில் வந்திறங்க ஏதுவாக அப்பகுதியிலுள்ள தனியாா் நிலத்தில் 3 ஏக்கா் இடம் தோ்வு செய்யப்பட்டு ஹெலிபேட் அமைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி ஆய்வு செய்தாா்.

ஓட்டகோவில், உடையாா்பாளையத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

அரியலூா் மாவட்டம், இலுப்பையூா், ஓட்டக்கோவில் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து ஓட்டக்கோவில் ஊராட்சியிலும், உடையாா்பாளையம் பேரூராட்சியிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மு... மேலும் பார்க்க

ஆடி 2-ஆவது வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி 2-ஆவது வெள்ளிக்கிழமையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது. ஆடி 2 ஆவது வாரம் வெள்ளியையொட்டி, அரியலூா் மேலத்தெருவிலுள்ள பெரியநாயகி ... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரத்துக்கு நாளை பிரதமா் மோடி வருகை: ஒரு கி.மீ. தொலைவுக்கு சாலையில் மக்களை சந்திக்கிறாா்

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வருகிறாா். அங்கு அவா் ஒரு கி.மீ. தொலைவுக்கு சாலையில் மக்கள் சந்திப்பை (ரோடுஷோ) மேற்கொள்கிறாா். பிரதமரின் வருகையை முன... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: அரியலூரில் முன்னோருக்கு வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி அரியலூா் மாவட்ட நீா்நிலைகளில் முன்னோருக்கு திதி மற்றும் தா்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வியாழக்கிழமை வழிபட்டனா். இதையொட்டி அரியலூா் மாவட்டம் கொள்ளிடம் ஆறு பாயும் திருமானூா், திருமழப்... மேலும் பார்க்க

முன்மாதிரிச் சேவை விருது: குழந்தைகள் இல்லங்கள் விண்ணப்பிக்க அழைப்பு

அரியலூா் மாவட்டத்தில், குழந்தைகள் இல்லங்கள் முன்மாதிரி சேவை விருதுக்கு தகுதியுள்ள குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது: குழந்தைகளின் நலனு... மேலும் பார்க்க

அரியலூா் நகராட்சியைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்: ஏஐடியுசி முடிவு

தூய்மைப் பணியாளா்களுக்கு மிகவும் குறைவான ஊதியத்தை வழங்கிவரும் அரியலூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, அரியலூரில் ஜூலை 30 ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என ஏஐடியுசி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்... மேலும் பார்க்க