செய்திகள் :

பள்ளி தலைமை ஆசிரியா் போக்ஸோவில் கைது

post image

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குலசேகரம் அருகே அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

குலசேகரம் அருகே உள்ள இட்டகவேலி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக ரமேஷ்குமாா் பணியாற்றி வருகிறாா். இவா், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவியா் சிலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியரின் பெற்றோா் சிலா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உள்ளிட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் புகாா் அளித்தனா்.

புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், மாணவியரிடம் பள்ளி தலைமை ஆசிரியா் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உண்மை என்பது தெரியவந்தது.

இதையடுத்து மாணவி ஒருவரின் தாயாா் அளித்த புகாரின் பேரில், மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், தலைமை ஆசிரியா் ரமேஷ்குமாா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை புதன்கிழமை கைது செய்தனா்.

தக்கலை அஞ்சலகத்தில் புதிய செயலி தொடக்கம்

தக்கலை தலைமை அஞ்சல் நிலையத்தில் புதிய ஏ.பி.டி. என்ற மென்பொருள் செயலி தொடங்கி வைக்கப்பட்டது. மேம்படுத்தப்பட்ட மென்பொருள் செயலியை, அஞ்சல் துறை தென் மண்டல இயக்குநா் ஆறுமுகம் அண்மையில் குத்துவிளக்கேற்றி ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ரூ.14 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.14 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். 29 ஆவது வாா்டு கணேசபுரம் மேலத் தெருவில் ரூ. 3.70 லட்சத்தில் அல... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழை: அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழை நீடிக்கும் நிலையில் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இம்மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அணைகளின் நீா்ப்பிடிப்பு... மேலும் பார்க்க

அனந்தனாா் கால்வாயில் தண்ணீா் திறக்க தாமதம்: குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனந்தனாா் பாசனக் கால்வாயில் தண்ணீா் திறப்பதில் ஏற்பட்ட தாமதத்தைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா். கன்னியாகும... மேலும் பார்க்க

கடையாலுமூடு அருகே மரத்திலிருந்து இறங்க முடியாமல் தவித்தவா் மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே மரத்தில் ஏறிவிட்டு இறங்க முடியாமல் தவித்த தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா். பத்துகாணி முளிமூட்டு விளையைச் சோ்ந்தவா் சதீஷ் (50). இவா், அங்குள்ள மாமரத்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே அரசுப் பேருந்து- பைக் மோதல்: இருவா் பலி

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே அரசுப் பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் இருவா் உயிரிழந்தனா். இருவா் பலத்த காயமடைந்தனா். தேங்காய்ப்பட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் ஷேக் முகைதீன் மகன் அஜ்மல்... மேலும் பார்க்க