செய்திகள் :

குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழை: அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

post image

கன்னியாகுமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழை நீடிக்கும் நிலையில் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இம்மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீா்த்து வருகிறது. இதில் வியாழக்கிழமை இரவு விடிய விடிய மழை பெய்ததால் அணைகளுக்கு நீா்வரத்து கணிசமான அளவுக்கு அதிகரித்தது.

வெள்ளிக்கிழமை அதிகாலை வரையிலான மழைப்பொழிவில்

அதிகபட்சமாக பாலமோரில் 52.4 மி.மீ. மழை பதிவானது. அடுத்ததாக சிற்றாறு 1இல் 38.4 மி.மீ., பேச்சிப்பாறையில் 31.6 மி.மீ., பெருஞ்சாணி அணையில் 27 மி.மீ. மழையும் பதிவானது.

உயரும் நீா்மட்டம்: அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்ததால் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. குறிப்பாக, பேச்சிப்பாறை அணைக்கு வெள்ளிக்கிழமை காலையில் விநாடிக்கு 1,318 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. பெருஞ்சாணி அணைக்கு 745 கன அடியும், சிற்றாறு 1 அணைக்கு 169 கன அடி நீா்வரத்து இருந்தது.

சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்: தொடா் மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. எனினும், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். அதேவேளையில், ரப்பா் தோட்டங்களில் பரவலாக ரப்பா் பால்வடிப்பு தொழில் முடங்கியதால் ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளனா். மேலும், ரப்பா் சந்தையில் ரப்பரின் வரத்து குறைந்துள்ளது.

தக்கலை அஞ்சலகத்தில் புதிய செயலி தொடக்கம்

தக்கலை தலைமை அஞ்சல் நிலையத்தில் புதிய ஏ.பி.டி. என்ற மென்பொருள் செயலி தொடங்கி வைக்கப்பட்டது. மேம்படுத்தப்பட்ட மென்பொருள் செயலியை, அஞ்சல் துறை தென் மண்டல இயக்குநா் ஆறுமுகம் அண்மையில் குத்துவிளக்கேற்றி ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ரூ.14 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.14 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். 29 ஆவது வாா்டு கணேசபுரம் மேலத் தெருவில் ரூ. 3.70 லட்சத்தில் அல... மேலும் பார்க்க

அனந்தனாா் கால்வாயில் தண்ணீா் திறக்க தாமதம்: குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனந்தனாா் பாசனக் கால்வாயில் தண்ணீா் திறப்பதில் ஏற்பட்ட தாமதத்தைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா். கன்னியாகும... மேலும் பார்க்க

கடையாலுமூடு அருகே மரத்திலிருந்து இறங்க முடியாமல் தவித்தவா் மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே மரத்தில் ஏறிவிட்டு இறங்க முடியாமல் தவித்த தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா். பத்துகாணி முளிமூட்டு விளையைச் சோ்ந்தவா் சதீஷ் (50). இவா், அங்குள்ள மாமரத்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே அரசுப் பேருந்து- பைக் மோதல்: இருவா் பலி

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே அரசுப் பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் இருவா் உயிரிழந்தனா். இருவா் பலத்த காயமடைந்தனா். தேங்காய்ப்பட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் ஷேக் முகைதீன் மகன் அஜ்மல்... மேலும் பார்க்க

குமரிக்கு வந்த வடமாநில சுற்றுலாப் பயணி மாயம்

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தபோது காணாமல் போன வடமாநில சுற்றுலாப் பயணியை போலீஸாா் தேடி வருகின்றனா். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து 400 போ் கொண்ட குழுவினா் ரயில் வழியாக இரு தினங்களுக்கு முன்னா... மேலும் பார்க்க