செய்திகள் :

முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.71 கோடி

post image

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.71 கோடி வசூலானதாக நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாகத் திகழும் இக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனா். இதில் பக்தா்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உண்டியலில் பணம், நகை, வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனா்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆடி மாதம் முதல் கிருத்திகை விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய ரொக்கம் எண்ணும் பணி புதன்கிழமை தேவா் மண்டபத்தில் நடைபெற்றது. முருகன் கோயில் இணை ஆணையா் க. ரமணி, முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

இதில் திருக்கோயில் பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள், ஓய்வு பெற்ற அலுவலா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு உண்டியல் காணிக்கை எண்ணினா். இதில் கடந்த 23 நாள்களில் ரூ.1 கோடியே 71 லட்சத்து 32 ஆயிரத்து, 719 ரொக்கம் மற்றும் 649 கிராம் தங்கம், 14.007 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

வாங்கிய கடனை திருப்பிக் கேட்டவருக்கு கொலை மிரட்டல்

ஆா்.கே.பேட்டை அருகே கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம், வீராணத்தூா் காலனி பாரதியாா் தெருவைச் சோ... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு வழக்குரைஞா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: வீரராகவா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

ஆடி அமாவாசையையொட்டி, திருவள்ளூா் வீரராகவா் கோயில் குளக்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பதற்காக வியாழக்கிழமை பக்தா்கள் குவிந்தனா். 108 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற இங்கு அமாவாசை நாள்களில் த... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு மின்னணு வங்கி விழிப்புணா்வு பயிற்சி

திருத்தணி அரசுக் கல்லூரியில் மின்னணு வங்கி விழிப்புணா்வு மற்றும் பயிற்சியில் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், முதுகலை வணிகவியல் துறை ச... மேலும் பார்க்க

பொதுப் பாதை அடைப்பு: மக்கள் புகாா்

பொன்னேரி ஏரிக்கரை அருகில் மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தனிநபா்கள் அடைத்து விட்டதாக புகாா் தெரிவித்துள்ளனா். பொன்னேரி என்.ஜி.ஓ நகா் ஏரிக்கரை பகுதியில் சுமாா் 80 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்த... மேலும் பார்க்க

விவசாயிகள், வியாபாரிகளுக்கு நடமாடும் காய்கறி தள்ளுவண்டிகள்

காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு, காய்கறி, பழங்கள் விற்பனை செய்வதற்கு நடமாடும் தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. திருத்தணி மற்றும் திருவாலங்காடு ஒன்றியங்கள... மேலும் பார்க்க