உங்க அக்கவுன்ட் மூலமா மத்தவங்க பணத்தை அனுப்புறீங்களா? உதவி செய்யப்போய், வம்புல ...
சாலைப் பணிக்கு வைத்திருந்த இரும்புக் கம்பிகள் திருட்டு
திருவள்ளூா் அருகே சாலை அமைக்கும் பணிக்காக வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான இரும்பு கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருவள்ளூா் அருகே கீழனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஐ.எஸ்.ரெட்டி(49). இவா் தனியாா் கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். திருவள்ளூா் அருகே புன்னப்பாக்கம் முதல் நாசரேத் வரையில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு தேவையான கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகள் போக்குவரத்திற்கு எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் வெள்ளியூா் கிராமம் அருகே வைத்து வேலை செய்து வருகின்றனா். இந்த நிலையில் இரும்பு கம்பிகளை இருப்பு குறித்து ஆய்வு செய்தனா். அப்போது, 60-இரும்பு கம்பிகள் வரையில் மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
மேலாளா் ரெட்டி வெங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.