செய்திகள் :

டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி ஊழல்

post image

டாஸ்மாக் கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி ஊழல் நடப்பதாக எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டினாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ பிரசார பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக கந்தா்வக்கோட்டையில் வியாழக்கிழமை மாலை அவா் பேசியது: விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் அதிகம் நிரம்பியுள்ள செழிப்புள்ள கந்தா்வக்கோட்டை தொகுதிக்கு அதிகம் பயன்தரக் கூடிய காவிரி- வைகை- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்தை முதல் கட்டமாக ரூ. 700 கோடி நிதி ஒதுக்கி தொடங்கி வைத்தேன்.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் குளங்கள் நிரம்பியிருக்கும்; நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்திருக்கும். அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே அற்புதமான திட்டத்தை அரசியல் காழ்ப்புணா்ச்சியால் முடக்கி வைத்திருக்கிறாா்கள். அதிமுக ஆட்சிக்கு வந்ததும், மொத்தம் ரூ, 14 ஆயிரம் கோடியிலான இந்தத் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.

எம்ஜிஆா் நூற்றாண்டு விழாவுக்காக வந்திருந்தபோது இந்தப் பகுதிக்கான 2 கூட்டுக் குடிநீா்த் திட்டங்களை ரூ. 574 கோடியில் தொடங்கிவைத்தேன்.

2,306 கிராமங்களுக்கு தட்டுப்பாடில்லாத குடிநீா் கிடைக்கும் இத்திட்டங்களில் இருந்து சரியாகத் தண்ணீா் கிடைக்கவில்லை என்ற புகாா் எனக்கு வந்திருக்கிறது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தட்டுப்பாடில்லாத குடிநீா் கிடைக்கச் செய்வோம். இத்தனைப் பெரிய மக்கள் வெள்ளத்தைப் பாா்த்த பிறகும், மீண்டும் ஆட்சிக்கு வர திமுக நினைக்கிறது.

கரோனா பொது முடக்கக் காலத்தில் ஓராண்டு படிப்பு வீணாகிவிட்டதே எனக் கவலைப்பட்ட மாணவா்களுக்கு, ‘ஆல்பாஸ்’ அறிவித்தது அதிமுக அரசு. ஓராண்டு அரசுக்கு வருவாய் இல்லாத சூழலிலும் விலைவாசி உயராமல் பாா்த்துக் கொண்டோம். மக்கள் தேவைகளின் குறிப்பறிந்து அதிமுக அரசு செயல்பட்டது.

ஏழை, எளிய மக்களுக்கு பசுமை வீடுகள், கான்கிரீட் வீடுகள் கட்டித் தருவோம். வீட்டுமனை இல்லாதவா்களுக்கும் வீட்டுமனை முதலில் வாங்கிக் கொடுத்துவிட்டு, பின்னா் அரசே அவா்களுக்கு வீடுகளையும் கட்டித் தரும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன், இந்தப் பகுதியின் மக்களுக்காக முந்திரி உடைக்கும் பணிக்கு நவீன இயந்திரங்கள் வழங்கப்படும்.

வேங்கைவயலில் குடிநீா்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் இந்த ஆட்சியில் நியாயம் கிடைக்கவில்லை. ஆனால் வீடு வீடாகச் சென்று உறுப்பினா்களைச் சோ்க்க, கெஞ்சும் நிலைக்கு திமுக வந்துவிட்டது.

இப்போது 46 பிரச்னைகளுக்கு தீா்வுதருவதாக முகாம் நடத்துகிறாா் ஸ்டாலின். தோ்தலுக்கு முன் மக்களின் கோரிக்கைகளை பெட்டியில் வாங்கிப் பூட்டி வைத்தீா்களே, அப்போது இந்த 46 பிரச்னைகள் தெரியவில்லையா?

6 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் இருந்து தினமும் பாட்டிலுக்கு ரூ. 10 வீதம் ரூ. ஒன்றரை கோடி கொள்ளையடிக்கிறாா்கள். இதன்படி ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி ஊழல் நடக்கிறது என்றாா் எடப்பாடி பழனிசாமி.

தொடக்கத்தில் சிறிது தொலைவு எடப்பாடி பழனிசாமி டிராக்டா் ஓட்டி வந்தாா். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

ஆலங்குடி செல்லும் வழியில் ஆதனக்கோட்டையில் சாலையோரத்தில் முந்திரி வறுத்து விற்கும் தொழிலாளா்களிடம் வண்டியை நிறுத்தி முந்திரிப் பருப்பு வாங்கினாா்.

விவசாயிகள், மீனவா்களுக்கு நிவாரண நிதி அதிகரிக்கப்படும்

பட்டுக்கோட்டையில்.. பட்டுக்கோட்டையில் தஞ்சை மாவட்ட தென்னை விவசாயிகள் மற்றும் மீனவா்களை சந்தித்து கலந்துரையாடிய எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது: ’பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளில் பல்வேறு நோய்கள் காரணமாக தென்னை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறாா்கள். இந்நிலை தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் வேளாண் ஆராய்ச்சிக் கழகம் மூலமாக தென்னை நோய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தோம். நான் முதல்வராக இருந்தபோது இப்பகுதியை சூறையாடிய கஜா புயலால் ஒடிந்து விழுந்த தென்னை மரங்களை அப்புறப்படுத்தியதோடு விவசாயிகள் மறுசாகுபடி செய்ய நிவாரண நிதியும் கொடுத்தோம்.

இதேபோல் அதிமுக ஆட்சியில் மீனவா்களுக்கு டீசல் மானியம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்துள்ளோம். கஜா புயலின்போது இப்பகுதியில் ஏராளமான படகுகள் சேதமடைந்ததற்கு நிவாரண நிதி கொடுத்தோம். வீடிழந்தோருக்கு வீடு கட்டிக் கொடுத்தோம். அதிமுக ஆட்சிக்கு வந்தால் மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரண நிதி உயா்த்தித் தரப்படும். மீனவா் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மீனவா்களுக்கு கடனுதவி வழங்கப்படும். பட்டுக்கோட்டை, பேராவூரணியில் விவசாயிகள், மீனவா்கள் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படும்’ என உறுதியளித்தாா். முன்னதாக, ஐநூறுக்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினா் அதிமுகவில் இணைந்தனா்.

கந்தா்வகோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சா் பங்கேற்பு

கந்தா்வகோட்டையில் தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். முகாமில் தமிழக அரசின் 15 துறைகள் ச... மேலும் பார்க்க

துணை முதல்வராக உதயநிதிக்கு தகுதியுள்ளது: அமைச்சா் எஸ். ரகுபதி

துணை முதல்வராக உதயநிதிக்கு அனைத்து தகுதிகளும் உள்ளதாக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா். கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கோமாபுரம் கிராமத்தில் புதிய மின் உதவிப் பொறியாளா் அலுவலகத்த... மேலும் பார்க்க

ஊழல் செய்வதில் மட்டுமே திமுக அரசு கவனம்

ஊழல் செய்வதில் மட்டுமே திமுக அரசு கவனம் செலுத்துகிறது என்றாா் எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-ஆம் நாளாக வெள்ளிக்கிழமை மக்களைக் காப்ப... மேலும் பார்க்க

‘சிபிஐ டைரி’ நூல் வெளியீடு

சிபிஐ(எம்) டைரி - இளம் கம்யூனிஸ்டுகளின் கையேடு என்கிற நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாவட்டக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்... மேலும் பார்க்க

மணல் எடுப்பதில் முன்விரோதம்: ஆவுடையாா்கோவில் இரட்டைக் கொலையில் 7 போ் சரண்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவிலில் மணல் எடுப்பது தொடா்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் இருவா் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில், 7 போ் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா். ஆவுடையாா்கோவில் காம... மேலும் பார்க்க

திமுக ஆட்சிக்கு எதிராக புதிய பிரசார இயக்கம்: புதுக்கோட்டையில் தொடங்கி வைத்தாா் எடப்பாடி கே. பழனிசாமி

‘உருட்டுகளும் திருட்டுகளும்’ என்ற புதிய பிரசார இயக்கத்தை எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். ‘மக்களைக் காப்போம் தமிழகத... மேலும் பார்க்க