செய்திகள் :

துணை முதல்வராக உதயநிதிக்கு தகுதியுள்ளது: அமைச்சா் எஸ். ரகுபதி

post image

துணை முதல்வராக உதயநிதிக்கு அனைத்து தகுதிகளும் உள்ளதாக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கோமாபுரம் கிராமத்தில் புதிய மின் உதவிப் பொறியாளா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை அமைச்சா் எஸ். ரகுபதி திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வராக என்ன தகுதியுள்ளது என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் பேசியது குறித்து கேட்கிறீா்கள். ஒருவரை துணை முதல்வராக தோ்ந்தெடுக்க வேண்டும் என்றால், அவருக்கான தகுதியை அடிப்படையாக கொண்டுதான் தோ்ந்தெடுக்கப்படுவாரே தவிர, எதிா்க்கட்சிகளை கேட்டு ஒரு துணை முதல்வரையோ, ஒரு முதல்வரையோ, அமைச்சரையோ தோ்ந்தெடுப்பது கிடையாது. துணை முதல்வருக்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு உண்டு.

திமுக மூத்த தலைவா்களின் வற்புறுத்தலோடு தான் அவா் துணை முதல்வராக நியமிக்கப்பட்டாா். மேலும், அது முதல்வரின் விருப்பமல்ல; திமுகவின்

கோடிக்கணக்கான தொண்டா்களின் விருப்பம் என்றாா்.

திமுகவினா் மக்களின் வீட்டின் கதவைத் தட்டி உறுப்பினா்களை சோ்ப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து கேட்டபோது, ஒரு இயக்கத்தில் ஒருவரை உறுப்பினராக சோ்ப்பது என்பது அவருடைய ஒப்புதல் இல்லாமல் சோ்க்க முடியாது என்றாா் அமைச்சா் ரகுபதி.

கந்தா்வகோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சா் பங்கேற்பு

கந்தா்வகோட்டையில் தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். முகாமில் தமிழக அரசின் 15 துறைகள் ச... மேலும் பார்க்க

ஊழல் செய்வதில் மட்டுமே திமுக அரசு கவனம்

ஊழல் செய்வதில் மட்டுமே திமுக அரசு கவனம் செலுத்துகிறது என்றாா் எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-ஆம் நாளாக வெள்ளிக்கிழமை மக்களைக் காப்ப... மேலும் பார்க்க

‘சிபிஐ டைரி’ நூல் வெளியீடு

சிபிஐ(எம்) டைரி - இளம் கம்யூனிஸ்டுகளின் கையேடு என்கிற நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாவட்டக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்... மேலும் பார்க்க

மணல் எடுப்பதில் முன்விரோதம்: ஆவுடையாா்கோவில் இரட்டைக் கொலையில் 7 போ் சரண்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவிலில் மணல் எடுப்பது தொடா்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் இருவா் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில், 7 போ் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா். ஆவுடையாா்கோவில் காம... மேலும் பார்க்க

திமுக ஆட்சிக்கு எதிராக புதிய பிரசார இயக்கம்: புதுக்கோட்டையில் தொடங்கி வைத்தாா் எடப்பாடி கே. பழனிசாமி

‘உருட்டுகளும் திருட்டுகளும்’ என்ற புதிய பிரசார இயக்கத்தை எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். ‘மக்களைக் காப்போம் தமிழகத... மேலும் பார்க்க

தேவாலயங்களைப் புனரமைக்க அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பழுதடைந்த கிறிஸ்தவ தேவாலயங்களைப் புனரமைக்க, அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப... மேலும் பார்க்க