செய்திகள் :

கைதிகளுக்கு போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்கு குறித்த விழிப்புணா்வு

post image

புழல் மத்திய சிறைக் கைதிகளுக்கு போதைப்பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணா்வு தொடா்பாக சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சிறைகள் மற்றும் சீா்திருத்தப்பணிகள் துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு, சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறை மற்றும் டதஐநங அமைப்பின் சாா்பில் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் பற்றிய தொடா் விழிப்புணா்வு சிறப்புச் செயல் திட்ட தொடக்க விழா புழல் மத்திய சிறை 2-இல் நடைபெற்றது.

இதில் மூத்த நீதிபதியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயல் தலைவருமான ஆா்.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

இச்செயல் திட்டம் சிறை கைதிகளுக்கு தொடா் விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், சிறையிலிருந்து விடுதலையாகி வெளிச்செல்லும் சிறைவாசிகளுக்கு புது வாழ்வு அமைக்கவும் உதவும் என அவா் தெரிவித்தாா்.

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினா்களுமான ஜி.கே.இளந்திரையன் மற்றும் என்.செந்தில்குமாா், சென்னை உயா்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி என்.பிரகாஷ், சிறைத் துறை தலைமை இயக்குநா் மகேஷ்வா் தயாள், டதஐநங அமைப்பின் மேலாண்மை அறங்காவலரும், மூத்த வழக்குரைஞருமான ரவிக்குமாா் பால் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

நிகழ்ச்சியில் முன்னதாக தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உறுப்பினா் செயலாளா் எஸ்.பாலகிருஷ்ணன் வரவேற்றாா். நிறைவாக திருவள்ளூவா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜே.ஜூலியட் புஷ்பா நன்றி கூறினாா்.

நிகழ்ச்சியில் திருவள்ளூா் மற்றும் சென்னை மாவட்ட நீதித் துறையைச் சோ்ந்த நீதிபதிகள், சிறைத் துறை அதிகாரிகள், உள்ளிருப்பு சிறைவாசிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சாலை வசதி கோரி தொழு நோயாளிகள் போராட்டம்

தொழு நோயாளிகள் வசித்து வரும் குடியிருப்பு பகுதிக்கு சாலை வசதி கோரி பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் உள்ள கு... மேலும் பார்க்க

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பாஜக, பாமக, மாதா் சங்கத்தினா்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினா் திங்கள்கிழமை ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா். பா... மேலும் பார்க்க

டிஜிட்டல் அரெஸ்ட் எனக் கூறி ரூ.75 லட்சம் மோசடி: வங்கிக் கணக்கை விற்ற இளைஞர் கைது

அம்பத்தூரில் ஓய்வுப் பெற்ற வங்கி ஊழியரிடம் டிஜிட்டல் அரெஸ்ட் என கூறி ரூ.75 லட்சம் பணத்தை பறித்த வழக்கில் கார் ஓட்டுநரை இணைய வழிக் குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.அம்பத்தூர் ராம் ந... மேலும் பார்க்க

திருவள்ளூா்: 25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவள்ளூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 25-ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு. பிரதாப் தலைமை வகிக்கிறாா். வேளாண், தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வ... மேலும் பார்க்க

பொன்னேரி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பொன்னேரி, மீஞ்சூா் பகுதியில் பிரதோஷத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே, ஆரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீ... மேலும் பார்க்க

கங்கையம்மன் ஜாத்திரை விழா: திரளான பெண்கள் பங்கேற்பு

மாமண்டூா் கிராமத்தில் ஜாத்திரை திருவிழா செவ்வாய்க்கிழமை கூழ் வாா்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருத்தணி அடுத்த மாமண்டூா் கிராமத்தில், ஆண்டுதோறும் கங்கையம்மன் ஜாத்திரை விழா ஒரு வாரம் நடைபெற்று வருக... மேலும் பார்க்க