செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர் குறித்து ட்ரம்பின் பேச்சு: ``74 நாள்களில் 25-வது முறை..." - காங்கிரஸ் விமர்சனம்!

post image

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய அரசு ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அது இந்தியா பாகிஸ்தான் போராக மாறும் சூழல் ஏற்பட்டது. இதற்கிடையில், இந்த மோதலை நிறுத்தாவிட்டால் இரு நாடுகளுக்குமிடையில் வணிகத் தொடர்பை அமெரிக்கா நிறுத்திக் கொள்வதாகக் கூறி இரு நாடுகளுக்கு மத்தியில் சமரசம் செய்து வைத்ததாக அமெரிக்க அதிபர் கூறினார்.

operation sindoor
Operation Sindoor - ஆபரேஷன் சிந்தூர்

அப்போதே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்திய விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை கடுமையாக விமர்சித்து அரசிடம் கேள்வி எழுப்பின. 'இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடவில்லை' என இந்தியா முற்றிலுமாக மறுத்தது.

இந்த நிலையில், நடந்துவரும் மழைக்காலக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் விவாதத்தின் போது மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, `` அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு போரை நிறுத்தியதாகத் தெரிவித்திருக்கிறார்.

அவர் ஒரு முறை அல்ல, 24 முறை போரை நிறுத்தியதாக பேசியிருக்கிறார். இது நாட்டிற்கு அவமானகரமானது. இந்த விவகாரத்தில் இந்திய அரசின் நிலைபாட்டை விளக்க வேண்டும்" என்றார்.

இந்த விவகாரமே இன்னும் பேசிமுடியாத நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ட்ரம்ப், ``இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்தப் போரை தடுத்து நிறுத்தினேன். ஒருவேளை அதை அப்படியே விட்டிருந்தால் அது அணுசக்திப் போராகக் கூட மாறியிருக்கலாம்.

ட்ரம்ப்

இரு நாடுகளிடமும் நீங்கள் போரைத் தொடர்ந்தால் இரு நாடுகளுடனும் இனி வர்த்தகம் செய்யப்போவதில்லை எனக் கூறினேன். அதன் பிறகுதான் போர் முடிவுக்கு வந்தது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ட்ரம்பின் இந்த உரையைக் குறிப்பிட்டு காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பக்கத்தில், ``நாடாளுமன்றத்தில் பஹல்காம் - சிந்தூர் தொடர்பான விவாதத்திற்கு உறுதியான தேதிகளை வழங்க மறுக்கிறது மோடி அரசு. விவாதத்தில் பிரதமர் மோடி பதிலளிக்கவும் மறுக்கிறார்.

அதனால் அதிபர் ட்ரம்ப் கடந்த 74 நாள்களில் 25-வது முறை இந்தியா - பாகிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வந்ததாகப் பேசுகிறார். ஆனால் இந்தியப் பிரதமர் இதுகுறித்து வாய் திறக்காமல் முற்றிலும் அமைதியாக இருக்கிறார். வெளிநாடுகளுக்குச் சென்று உள்நாட்டின் ஜனநாயக நிறுவனங்களை சீர்குலைக்க மட்டுமே நேரம் ஒதுக்குகிறார்" என விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"அதிமுக-வை பாஜக விழுங்கிய கதை" - பட்டியலிடும் விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே இருப்பதால் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.அதில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி ... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரம்: ”இராஜேந்திர சோழனின் 1,054 வது பிறந்தநாள் விழா”- கவனம் பெற்ற மோடி வருகை!

மாமன்னன் இராஜேந்திர சோழனின் பிறந்த தினம் ஆடி திருவாதிரை திருவிழாவாக கங்கை கொண்ட சோழபுரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது அரசு விழாவாக கொண்டாடப்படும் என கடந்த 2023ம் ஆண்டு அரசு அறிவித்தது. அதன்படி இரா... மேலும் பார்க்க

"முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமித் ஷாவிடம் தான் கேட்க வேண்டும்!" - டி.டி.வி.தினகரன்

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்,"வரும் தேர்தலில் திமுக-வை வீழ்த்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் தேசிய ஜனநாயக க... மேலும் பார்க்க

`தாலிக்கு தங்கத்துடன் மணமகளுக்கு பட்டுப்புடவை' - உறுதி அளித்த எடப்பாடி பழனிசாமி

`மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது டெல்டா மாவட்டத்தில் பரப்புரை செய்து வரும் எடப... மேலும் பார்க்க

'இதனால்தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்'- ஸ்டாலின் உடல்நலம் குறித்து அமைச்சர் மா.சு

லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதை அடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் (ஜூலை 21) அனுமதிக்கப்பட்டார். மூன்று நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவு... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ: 'ஆகஸ்ட் 1 முதல் மெட்ரோ கார்டை டாப் அப் செய்ய முடியாது' - CMRL சொல்வது என்ன?

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) பயணிகளின் வசதிக்காக முழுமையாக சிங்கார சென்னை கார்டுகளுக்கு மாற முடிவு செய்துள்ளது. இதன்படி, ஸ்மார்ட் கார்டுகளைப் பயன்படுத்தி வந்த பயணிகள் தங்கள் கார்டுகளில் உள்ள இர... மேலும் பார்க்க