செய்திகள் :

பிரிட்டன் புறப்பட்டார் பிரதமர் மோடி!

post image

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பிரிட்டன் நாட்டுக்கு இன்று(ஜூலை 23) புறப்பட்டார்.

பிரிட்டன், மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கான 4 நாள்கள் அரசுமுறை சுற்றுப்பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கியுள்ளார்.

முதல்கட்டமாக, பிரிட்டன் பிரதமா் கியர் ஸ்டார்மரின் அழைப்பின்பேரில் பிரதமா் மோடி அந்நாட்டுக்கு 2 நாள்கள் பயணமாக இன்று புறப்பட்டுள்ளார். இது பிரதமா் மோடியின் நான்காவது பிரிட்டன் பயணம் என்றாலும், ஸ்டார்மர் பிரதமராகப் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

இந்த முக்கியத்துவமான பயணத்தில், இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாட்டு தலைவர்களும் கையொப்பமிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, இந்த ஒப்பந்ததுக்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

மேலும், பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மருடன் பல்வேறு இருதரப்பு உறவுகள் குறித்தும், பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்தும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

பிரிட்டன் பயணத்தைத் தொடர்ந்து, பிரதமர் மோடி ஜூலை 25, 26 ஆகிய தேதிகளில் மாலத்தீவுக்குச் செல்கிறார். மாலத்தீவின் 60-ஆவது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் பிரதமர் மோடி, அந்நாட்டின் அதிபர் முகமது மூயிஸை சந்தித்து பரஸ்பர நலன் சாா்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

பிரதமரின் இந்தப் பயணம் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும் என எதிா்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: ரைட்ஸ் நிறுவனத்தில் உதவி மேலாளர் பணி: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

Prime Minister Narendra Modi left for the United Kingdom today (July 23) on a state visit.

தில்லியில்... ஷேக் ஹசீனா கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து!

தில்லியில், வங்கதேசத்தின் முன்னாள் ஆளும் கட்சியான அவாமி லீக் தலைவர்கள் திட்டமிட்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் இரும்புப் பாலம் உடைந்து விபத்து!

மேற்கு வங்கத்தில் தண்ணீர் குழாய் செல்லும் இரும்புப் பாலம் உடைந்து விபத்துக்குள்ளானது. தாமோதர் நதியின் மீது பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாய்கள் மூலம் நகர்புறங்களுக்கான குடிநீர் அனுப்பப்படும் ந... மேலும் பார்க்க

மிசோரமின் அதிக வயதான பெண் மரணம்!

மிசோரமின் லாங்ட்லாய் மாவட்டத்தில், அம்மாநிலத்தின் அதிக வயதுடைய பெண் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. லாங்ட்லாய் மாவட்டத்தின், பங்குவா கிராமத்தில் வசித்த வந்தவர் ஃபாமியாங் (வயது 117). இவர், கடந்த 1908-... மேலும் பார்க்க

ஜூலை 29 -ல் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்! மோடி பங்கேற்பு

நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜூலை 29 ஆம் தேதி விவாதிக்கப்படும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, 16 மணிநேரம் நடைபெறும் விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க... மேலும் பார்க்க

அதீத கவனத்துடன் அனுப்பப்பட்ட உடல்கள்! பிரிட்டன் குடும்பத்தினர் புகார் மீது மத்திய அரசு பதில்

பிரிட்டன் நாட்டுக்கு, அதீத தொழில்பாங்குடன் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக, பிரிட்டன் நாட்டவரின் குற்றச்சாட்டக்கு, மத்திய வெளியுறவு விவகாரத் துறை விளக்கம் கொடுத்துள்ளது.ஏர் இந்தியா விமான விபத்தில் பலிய... மேலும் பார்க்க

ஆலப்புழாவில் அச்சுதானந்தன் உடல்! 150 கி.மீ. கடக்க 22 மணிநேரம்!

திருவனந்தபுரத்தில் நேற்று முற்பகல் புறப்பட்ட கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனின் இறுதி ஊர்வலம், 22 மணிநேரத்துக்கு பிறகு ஆலப்புழாவுக்கு வந்தடைந்தது.கேரளத்தின் முன்னாள் முதல்வரும், சிபிஎம் தல... மேலும் பார்க்க