செய்திகள் :

விண்ணப்பித்துவிட்டீர்களா?: கடலோரக் காவல் படையில் உதவி தளபதி பணி

post image

இந்திய கடலோரக் காவல் படையில் Assistant Commandant பணிகளுக்கு தகுதியான இந்திய ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது பற்றிய விபரம் வருமாறு:

பணி: Assistant Commandant (General Duty-Male) (2027 Batch)

காலியிடங்கள்: 140 (SC-25,ST-24, OBC-35, EWS-10, UR-46)

சம்பளம்: மாதம் ரூ. 56,100

தகுதி : கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Commandant (Technical)

பிரிவு: Mechanical, Electrical, Electronics

காலியிடங்கள்: 30 (SC-3,ST-4, OBC-8, UR-13, EWS-2)

சம்பளம்: மாதம் ரூ. 56,100

தகுதி: Mechanical Engineering Branch: Naval Architecture, Mechanical, Marine, Automobile, Mechatronics, Industrial and Production, Metallurgy, Design, Aeronautical, Aerospace Qunicip ஆகிய ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ முடித்திருக்க வேண்டும்.

Electrical & Electronics Branch: Electrical, Electronics, Telecommunication, Instrumentation, Instrumentation & Control, ECE, Power Electronics Qunsing ஆகிய ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 1.7.2026 தேதியின்படி 21 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பில் மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் English, Reasoning, Numerical Ability, General Science, Maths, General Knowledge பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

எழுத்துத்தேர்வு, மருத்துவத் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் இரண்டாம் கட்ட CCBT, Picture Perception Test, Psychological Test எனப்படும் கடற்படை அதிகாரிப் பணிக்குரிய தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

மே மாதம் தொடங்கும் இந்த தேர்வுகள் மும்பை, கோவா, சென்னை, கொல்கத்தா போன்ற இடங்களில் நடத்தப்படும்.

முதல் கட்ட தேர்வு செப்பம்பர் மாதம் தொடங்கும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்தக் கட்ட தேர்வுகளுக்கு அழைக்கப்படுவர்.

அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டும் கேரளம் மாநில எழிமலாவிலுள்ள கடற்படைத்தளத்தில் 44 வாரம் பயிற்சி அளிக்கப்பட்டு அதிகாரிப் பணி வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு ரயில் ஏசி வகுப்பு அல்லது பேருந்து கட்டணம் வழங்கப்படும். கடற்படை பயிற்சி டிசம்பர் 2026 இல் தொடங்கும்.

தேர்வு நடைபெறும் தேதிகள்

முதல் கட்டத் தேர்வு: செப்டம்பர் 18, 2025

இரண்டாம் கட்டத் தேர்வு: நவம்பர் 2025

மூன்றாம் கட்டத் தேர்வு: ஜனவரி 2026

நான்காம் கட்டத் தேர்வு: மார்ச் 2026

உடற்தகுதி : குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். மேலும் உயரத்திற் கேற்ற எடை மார்பளவு 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மையும் கொண்டிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு மற்றும் இதரத் தேர்வுகள் தொடர்பான அனைத்து e-Admit Card மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiancoastguard.cdac.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.7.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.

காலணி வடிவமைப்பு- மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை: 8-ம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு!

காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாகவுள்ள Junior Faculty, Faculty பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட... மேலும் பார்க்க

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பொதுத் துறை வங்கியான பரோடா வங்கியில் வங்கியில் காலியாகவுள்ள 2,500 உள்ளூர் வங்கி அலுவலர்(Local Bank Officer)பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது பற்றிய வ... மேலும் பார்க்க

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி!

சேலம், தேனி, உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களிள் உள்ள தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக கல்லூரிகளில் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வில் ... மேலும் பார்க்க

ரைட்ஸ் நிறுவனத்தில் உதவி மேலாளர் பணி: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

மத்திய பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விவரங்களை பார்ப்போம... மேலும் பார்க்க

ஜூலை 25-இல் திருப்பத்தூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக ஆட்சியா் க.... மேலும் பார்க்க

ஜூலை 26-இல் காஞ்சிபுரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம்: தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சாா்பில் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரியில் ஜூலை 26-ஆம் தேதி காலை 9 மணிக்கு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா... மேலும் பார்க்க