செய்திகள் :

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

post image

பொதுத் துறை வங்கியான பரோடா வங்கியில் வங்கியில் காலியாகவுள்ள 2,500 உள்ளூர் வங்கி அலுவலர்(Local Bank Officer)பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது பற்றிய விபரம் வருமாறு :

விளம்பர எண்: BOB/HRM/REC/ADVT/2025/05

பணி: Local Bank Officer

காலியிடங்கள் : 2500 (தமிழ்நாட்டுக்கு 60 இடங்கள்)

சம்பளம்: மாதம் ரூ. 48,480 - 85,920

தகுதி : ஏதாவதொரு பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிபுரிய விரும்பும் மாநிலத்தின் அலுவலக மொழியில் பேச, எழுதத் தெரிந்திருக்க வேண்டும். சிஏ, பொறியியல், மருத்துவம் சார்ந்த பட்டதாரிகளும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேற்கண்ட தகுதியுடன் ஏதாவதொரு வங்கி, நிதி நிறுவனங்களில் குறைந்தது ஒரு ஆண்டு அலுவலராக பணிபுரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 1.7.2025 தேதியின்படி 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி!

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத்தேர்வு நடை பெறும் நாள், இடம் குறித்த விபரம் அடங்கிய அட்மிட் கார்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, சேலம், கோவை, திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோயில், தஞ்சாவூர், கடலூர், விருதுநகர், வேலூர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள் ரூ.175. இதர பிரிவினர் ரூ.850 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 3.8.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ரைட்ஸ் நிறுவனத்தில் உதவி மேலாளர் பணி: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

Applications are invited from eligible Indian Citizens for appointment as Local Bank Officer in Bank of Baroda. The selected candidates shall be posted in the applied State only.

விண்ணப்பித்துவிட்டீர்களா?: கடலோரக் காவல் படையில் உதவி தளபதி பணி

இந்திய கடலோரக் காவல் படையில் Assistant Commandant பணிகளுக்கு தகுதியான இந்திய ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய விபரம் வருமாறு:பணி: Assistant Commandant (General Duty-Male)... மேலும் பார்க்க

காலணி வடிவமைப்பு- மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை: 8-ம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு!

காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாகவுள்ள Junior Faculty, Faculty பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட... மேலும் பார்க்க

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி!

சேலம், தேனி, உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களிள் உள்ள தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக கல்லூரிகளில் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வில் ... மேலும் பார்க்க

ரைட்ஸ் நிறுவனத்தில் உதவி மேலாளர் பணி: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

மத்திய பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விவரங்களை பார்ப்போம... மேலும் பார்க்க

ஜூலை 25-இல் திருப்பத்தூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக ஆட்சியா் க.... மேலும் பார்க்க

ஜூலை 26-இல் காஞ்சிபுரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம்: தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சாா்பில் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரியில் ஜூலை 26-ஆம் தேதி காலை 9 மணிக்கு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா... மேலும் பார்க்க