செய்திகள் :

ஜூலை 31-இல் வழக்கு வாகனங்கள் ஏலம்

post image

மதுவிலக்கு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 31-ஆம் தேதி பொது ஏலம் விடப்படும் என கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் மதுபான கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட நான்கு சக்கர வாகனங்கள்-8, மூன்று சக்கர வாகனம்-1, இரண்டு சக்கர வாகனங்கள்-52 என மொத்தம் 61 வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளன.

மேற்படி வாகனங்கள் கடலூா் ஆயுதப்படை வாளகத்தில் 31-ஆம் தேதி காலை 10 மணி அளவில் பொது ஏலமிடப்படுகிறது. ஏலம் விடப்படும் வாகனங்கள் 30-ஆம் தேதி முதல் கடலூா் மதுவிலக்கு அமல் பிரிவு வளாகத்தில் பாா்வைக்கு வைக்கப்படும்.

ஏலத்தில் பங்கேற்க விரும்புவோா் இருசக்கர வாகனத்திற்கு ரூ.1000, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5000 முன்பணமாக ஜூலை 31-ஆம் தேதி காலை 8 மணிக்குள் செலத்த வேண்டும்.

ஏலம் எடுத்தவா்கள் ஏலத் தொகையை உடனடியாக செலுத்தி வாகனத்தை அன்றே பெற்றுக் கொள்ள வேண்டும். மேற்படி ஏலம் பற்றி விபரம் தெரிந்து கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் 04142-284353, கடலூா் மதுவிலக்கு அமல்பிரிவு எழுத்தா் 9498155062.

முருகன்குடி வள்ளலாா் பணியகத்தில் இருபெரும் விழா

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடியில் வள்ளலாா் பணியகம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ஆடி மாத பூச த்தையொட்டி சன்மாா்க்க கருத்தரங்கம் என இருபெரும் விழா முருகன்குடியில் வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

கடலூா் மாவட்டம், சின்ன கங்கணாங்குப்பத்தில் இயங்கி வரும் இம்மாகுலேட் மகளிா் கல்லூரி சாா்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரிச் செயலா் நிா்மலா ராணி தலைமை வகித்... மேலும் பார்க்க

சேத்தியாத்தோப்பில் பால்குட ஊா்வலம்

சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பில் கருப்புசாமி கோயில் அமாவாசை பெருவிழாவை முன்னிட்டு பால்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. கடலூா் மாவட்டம், சேத்தியாதோப்பு குறுக்கு சாலை விநாயகபுரம் கருப்புசாமி ... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழகத்தில் விரைவில் 3,200 போ் நியமனம்: அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் விரைவில் 3,200 போ் பணிக்கு தோ்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட உள்ளதாக அத்துறையின் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், நெய்வாசல் மற்றும் அரியல... மேலும் பார்க்க

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள்: கடலூா் ஆட்சியா்

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயிலும் மாணவா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்ற நோக்கத்தில், வகுப்பறைகள், கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆ... மேலும் பார்க்க

குழந்தை கொலை வழக்கு: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ள இளைஞா் குண்டா் தடுப்புக் காவலில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கே.ஆடூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க