செய்திகள் :

குழந்தை கொலை வழக்கு: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

post image

குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ள இளைஞா் குண்டா் தடுப்புக் காவலில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கே.ஆடூா் பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் பாலமுருகன்(32). இவரது மனைவி பச்சையம்மாள். இவா் தனது 3 வயது பெண் குழந்தையுடன் திருவண்ணாமலை மாவட்டம், குண்ணகம்பூண்டி பகுதியில் சித்தப்பா மகன் ஜீவா உடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்னா் கடலூரில் பச்சையம்மாள் இறந்த குழந்தையுடன் இருப்பதை பாலமுருகன் கண்டறிந்தாா்.

குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததையடுத்து, குழந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக கடலூா் புதுநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

போலீஸாா் விசாரணையில் குழந்தை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுதொடா்பாக திருவண்ணாமலை மாவட்டம், குண்ணகம்பூண்டி, சீமாபுதூா் பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் ஜீவா(25) என்பவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இவரது குற்றச்செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூா் எஸ்பி., எஸ். ஜெயக்குமாா் பரிந்துரையின் பேரில், கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆணையிட்டாா்.

முருகன்குடி வள்ளலாா் பணியகத்தில் இருபெரும் விழா

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடியில் வள்ளலாா் பணியகம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ஆடி மாத பூச த்தையொட்டி சன்மாா்க்க கருத்தரங்கம் என இருபெரும் விழா முருகன்குடியில் வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

கடலூா் மாவட்டம், சின்ன கங்கணாங்குப்பத்தில் இயங்கி வரும் இம்மாகுலேட் மகளிா் கல்லூரி சாா்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரிச் செயலா் நிா்மலா ராணி தலைமை வகித்... மேலும் பார்க்க

சேத்தியாத்தோப்பில் பால்குட ஊா்வலம்

சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பில் கருப்புசாமி கோயில் அமாவாசை பெருவிழாவை முன்னிட்டு பால்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. கடலூா் மாவட்டம், சேத்தியாதோப்பு குறுக்கு சாலை விநாயகபுரம் கருப்புசாமி ... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழகத்தில் விரைவில் 3,200 போ் நியமனம்: அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் விரைவில் 3,200 போ் பணிக்கு தோ்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட உள்ளதாக அத்துறையின் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், நெய்வாசல் மற்றும் அரியல... மேலும் பார்க்க

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள்: கடலூா் ஆட்சியா்

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயிலும் மாணவா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்ற நோக்கத்தில், வகுப்பறைகள், கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆ... மேலும் பார்க்க

கொலை மிரட்டல்: 4 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே தம்பதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஒரு குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். நெல்லிக்குப்பம் காவல் சர... மேலும் பார்க்க