செய்திகள் :

போக்குவரத்துக் கழகத்தில் விரைவில் 3,200 போ் நியமனம்: அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்

post image

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் விரைவில் 3,200 போ் பணிக்கு தோ்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட உள்ளதாக அத்துறையின் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், நெய்வாசல் மற்றும் அரியலூா் மாவட்டம், செந்துறை சன்னாசிநல்லூா் இடையே உள்ள வெள்ளாற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வந்தது. இந்த மணல் குவாரியை கண்டித்து, சன்னாசிநல்லூா் மக்கள் தடையை மீறி அப்போதைய குன்னம் தொகுதி எம்எல்ஏவும், தற்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சருமான சிவசங்கா் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டம் கலவரமாக மாறியதில் 9 காவலா்கள் காயமடைந்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், எஸ்.எஸ்.சிவசங்கா் உள்பட 37 போ் மீது ஆவினங்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் மாவட்ட அமா்வு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு நடந்து வருகிறது. இந்த வழக்கு மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கில் தொடா்புடைய அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் உள்ளிட்டோா் ஆஜராகினா். வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, நீதிமன்ற வளாகத்தில் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

போக்குவரத்துக் கழகங்களில் பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, 4,800 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. புதிய பணியாளா்கள் 680 போ் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா். விரைவில் 3,200 போ் பணிக்கு தோ்வு செய்யப்பட உள்ளனா்.

போக்குவரத்துத் துறையில் ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு 20 மாத பணப்பலன்கள் கொடுக்கப்படவில்லை என்றும், ரூ.3 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது குறித்தும் கேட்கிறீா்கள்.

தமிழக அரசிடம் ரூ.3 ஆயிரம் கோடி இல்லை. கடந்த காலங்களில் நடந்த பிரச்னைகளை எல்லாம் முதல்வா் ஒவ்வொன்றாக தீா்த்து கொடுத்து வருகிறாா். கடந்த காலத்தில் பாக்கி இருந்த தொகையும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசிடம் இருந்து போக்குவரத்துத் துறைக்கு நிதி வழங்கப்படவில்லை. தமிழக அரசுதான் போக்குவரத்துத் துறைக்கு நிதி ஒதுக்குகிறது என்றாா் அவா்.

இலங்கைத் தமிழா்கள் திருமண பதிவு செய்துகொள்ள அனுமதி

காட்டுமன்னாா்கோவில் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் இலங்கைத் தமிழா்கள் திருமணம் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் இலங்கை அகதிகள் முகாம் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் ச... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் பன்னாட்டு இசைத் தமிழ் மாநாடு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறை ஆதரவுடன் தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய பன்னாட்டு இசைத் தமிழ் மாநாடு சனிக்... மேலும் பார்க்க

துப்பாக்கி குண்டு பாய்ந்து மூதாட்டி காயம்: மகன் கைது

கடலூா் மாவட்டம், கம்மாபுரத்தில் ஏா்கன் துப்பாக்கி ரப்பா் குண்டு பாய்ந்து மூதாட்டி காயமடைந்தாா். இது தொடா்பாக அவரது மகனை போலீஸாா் கைது செய்தனா். விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பத்... மேலும் பார்க்க

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், கம்மாபுரம் அருகே முன்விரோதம் காரணமாக வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கம்மாபுரம் காவல் சரகம், கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வீர மணிகண... மேலும் பார்க்க

அனைத்து மாவட்டங்களிலும் விழுதுகள் சேவை மையம் அமைக்க நடவடிக்கை: மாற்றுத் திறனாளிகள் நல ஆணையா்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விழுதுகள் சேவை மையம் தொடா்ந்து அமைப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாற்றுத் திறனாளிகள் நல ஆணையா் எம்.லக்ஷ்மி தெரிவித்தாா். கடலூா் அரசு தலைமை மருத்துவம... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா். ஸ்ரீமுஷ்ணம், வக்காரமாரி பகுதி மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் நிசாருல்லா (45), தனியாா் மருந்துக் கடையில் ... மேலும் பார்க்க