காஸாவில் கடும் பஞ்சம்! உணவுக்காக கேமராவை விற்கும் பத்திரிகையாளர்
வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்: இன்று முன்பதிவு தொடக்கம்
கோவா மாநிலம் வாஸ்கோட காமா - வேளாங்கண்ணி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் தென்மேற்கு ரயில்வே சாா்பில் வாஸ்கோட காமா - வேளாங்கண்ணி இடையே வரும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ஆக.27 மற்றும் செப்.1, 6 ஆகிய தேதிகளில் வாஸ்கோட காமாவிலிருந்து இரவு 9.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07361), மூன்றாம் நாள் அதிகாலை 3.45 மணிக்கு வேளாங்கண்ணியை அடையும்.
மறுமாா்க்கத்தில் ஆக.29, செப்.3, 8 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11.55-க்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07362) மூன்றாம் நாள் அதிகாலை 3 மணிக்கு வாஸ்கோடாகாமா சென்றடையும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.